பாரம்பரிய ஈவினிங் ஸ்நாக்ஸ்... மழை நேரத்துக்கு ஏற்ற சூடான போண்டா!

மழைக்காலாம் வந்தாலே சூடாக எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் நம்மிடம் வந்துவிடுகிறது. இதைத் தெரிந்துதான் உங்களுக்காக சுடச்சுட உருளைகிழங்கு போண்டா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

மழைக்காலாம் வந்தாலே சூடாக எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் நம்மிடம் வந்துவிடுகிறது. இதைத் தெரிந்துதான் உங்களுக்காக சுடச்சுட உருளைகிழங்கு போண்டா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
urad bonda

மழைக்காலம் வந்துகொண்டிருக்கும் சமயத்தில், உடனே மனதில் தோன்றும் முதல் விஷயம் – சூடாக, மசாலா வாசனையுடன் எதாவது சாப்பிடணும் என்பதுதான்! வெளியே மழை பொழிந்துகொண்டிருக்கும் போது, வீட்டில் குடும்பத்தோடு உட்கார்ந்து சுடச்சுட சாப்பிடுவது என்பது தான் ஒரு தனி அனுபவம்.

Advertisment

இந்த பதிவில் 'மழை ஸ்பெஷல்' ஸ்நாக் ஆக உருளைக்கிழங்கு போண்டாவை எளிதாக எப்படி செய்வது என்பதையும், சுவையாக செய்து குடும்பத்துடன் பகிர்வது எப்படி என்பதையும் விரிவாக பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு- 3
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய்-2
இஞ்சி- நன்றாக நறுக்கிய துண்டுகள்
எலுமிச்சை சாறு – 2 டேபில் ஸ்பூன்
மஞ்சள் பொடி -1/8 டேபில் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய்- 2 டேபில் ஸ்பூன்
கடுகு -3/4 டேபில் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1 டேபில் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கடலை மாவு -1/2 கப்
அரிசி மாவு-2 டேபில் ஸ்பூன்
நெய்- 1 டேபில் ஸ்பூன்
பெருங்காயம்- 3 சிட்டிகை
மஞ்சள்- 2 சிட்டிகை
சமயல் சோடா- 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

உருளைகிழங்கை குக்கரில் மூன்று விசில் வைத்து அவித்து எடுக்கவும் . அவித்த உருளை கிழங்கை நீரில் போட்டால் கை சுடாமல் அதன் தோகை உரிக்கலாம். அதன் பின் உருளைகிழங்கை நன்றாக பிசைந்துகொள்ளவும் .

Advertisment
Advertisements

அடுப்பை பற்ற வைத்து அதில் தாளிக்கும் அளவு எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பை போட்டு , கருவேப்பிலையும் போடவும் . பின் நறுக்கிய இஞ்சிம், பச்சை மிளகாய் , வெங்காயம் ஆகியவற்றை போட்டு பொன் நிறமாக வறுக்கவும்.

அதன் பிறக்கு மசித்து வைத்த உருளை கிழங்கு போட்டு , மஞ்சள் பொடியை சேர்த்து நன்றாக வதக்கவும் பின் அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் எண்ணெய்யை தொளிக்கவும் . இதை கிளறிய பிறக்கு இந்த கலவையை குளிந்த பாத்திரத்திற்கு மாற்றவும் . மிதமான சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துகொள்ளவும்.

கடலை மாவு , அரிசி மாவு , நெய் , பெருங்காயம், சமயல் சோடா, உப்பு, மஞ்சள், தண்ணீர் ஆகிய வற்றை கலந்து பச்சி மாவு செய்யவும். நீங்கள் பிடித்து வைத்த உருளை கிழங்கு உருண்டைகளை இந்த பச்சி மாவில் முக்கி , சூடான எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுடச்சுட போண்டா தயார்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: