கிட்னி பிரச்சனைக்கு ஆபரேஷன், மாத்திரை வேணாம்... புல் மாதிரி வளரும் இந்த செடியில் டிரிங்க்; இப்படி குடித்துப் பாருங்க!
சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் சிறுகண்பீளை மூலிகைக்கு இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை எவ்வாறு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இதில் பார்க்கலாம்.
சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் சிறுகண்பீளை மூலிகைக்கு இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை எவ்வாறு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இதில் பார்க்கலாம்.
சிறுகண்பீளை மூலிகையை பெரும்பாலும் பொங்கல் பண்டிகையின் சமயத்தில் நாம் பார்த்திருப்போம். இதனை பொங்கல் பூ என்று கூறுவார்கள். பார்ப்பதற்கு அலங்காரத்திற்காக வைக்கப்படும் பொருளாக இருந்தாலும், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான தகவல்கள் நியூஸ்7 தமிழ் யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
இந்தச் செடி பெரும்பாலான கிராமப் பகுதியில் மிக சாதாரணமாக வளர்ந்திருக்கும். இவை சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக, மருந்து மற்றும் அறுவை சிகிச்சைகள் இன்றி சிறுநீரகத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதை பயன்படுத்தி மருந்து தயாரிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. இதற்காக சிறுகண்பீளை செடியை வேருடன் எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் சிறுநெறுஞ்சில் மூலிகை, வாழைத்தண்டு சாறு ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.
இதையடுத்து, அரைத்து வைத்திருக்கும் மருந்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை ஒரு அவுன்ஸ் வீதம் மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து குடிக்க வேண்டும். அதன் பின்னர், இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் மூன்று நாட்களுக்கு குடிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இப்படி செய்யும் போது சிறுநீரகத்தில் இருக்கும் கல் கரைந்து விடும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். எனினும், சிறுநீரக பிரச்சனைக்காக தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்பவர்கள் தங்களுடைய மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் இதனை சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.