கொழுப்பை அகற்றி, கழிவுகளை வெளியேற்றும் இந்தப் பொடி... இப்படி சாப்பிட்டு வாங்க: டாக்டர் செங்கோட்டையன்

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றின் கலவையே திரிபலா மருந்தாக அறியப்படுகிறது. நம்முடைய செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைப்பதற்கு திரிபலா பொடி முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றின் கலவையே திரிபலா மருந்தாக அறியப்படுகிறது. நம்முடைய செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைப்பதற்கு திரிபலா பொடி முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Doctor Sengottaiyan

சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாக திரிபலா பொடி அங்கம் வகிக்கிறது என்று மருத்துவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதன்படி, திரிபலா பொடியின் நன்மைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை குறித்து பல்வேறு தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.

Advertisment

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றின் கலவையே திரிபலா மருந்தாக அறியப்படுகிறது. நம்முடைய செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைப்பதற்கு திரிபலா பொடி முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொழுப்பு அதிகரித்தல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான் பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகிறது என்று கூறப்படுகிறது. உணவு சரியான வகையில் செரிமானம் ஆகாமல் இருப்பது, இது போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

அந்த வகையில், கொழுப்பை அகற்றி, கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுவதற்கு திரிபலா பொடி பயன்படுகிறது என்று மருத்துவர் செங்கோட்டையன் அறிவுறுத்துகிறார். மேலும், மலச்சிக்கலை கட்டுப்படுத்துவதற்கும் திரிபலா பொடி உபயோகமாக இருக்கிறது.

Advertisment
Advertisements

எனவே, திரிபலா பொடியை தினசரி 5 கிராம் அளவிற்கு இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் செங்கோட்டையன் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, இதனை ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்கலாம். 

இது தவிர அதிகப்படியாக இருக்கும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைப்பதற்கு திரிபலா பொடியை பயன்படுத்தலாம். அந்த வகையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலை மற்றும் மாலையில் உணவுக்கு பின்பாக இரண்டு கிராம் அளவிற்கு திரிபலா பொடியை உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வாமை அல்லது சைனஸ் போன்ற சுவாச மண்டலம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு, திரிபலா பொடி மருந்தாக கொடுக்கப்படுகிறது. இதற்காக, காலை மற்றும் மாலையில் சுடுதண்ணீரில் இதனை கலந்து குடிக்கலாம்.

அதன்படி, தேவையை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் திரிபலா பொடியை எடுத்துக் கொள்ளும் போது, முழு பலனும் கிடைக்கும் என்று மருத்துவர் செங்கோட்டையன் வலியுறுத்துகிறார்.

நன்றி - DrSJ HotTv Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

triphala health benefits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: