சுவையான வாழைத் தண்டு முள்ளங்கி சாம்பார் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைத் தண்டு – 1 துண்டு
துவரம் பருப்பு – 50 கிராம்
முள்ளங்கி – 2
சின்ன வெங்காயம் – 4
மஞ்சள் தூள்- சிறிதளவு
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
கொத்த மல்லித் தழை – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக் கேற்ப
காய்ந்த மிளகாய் – ஒன்று
தனியா – 3 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பை வேக வைக்கவும். அதோடு உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.புளி கரைச்சல் தயார் செய்து வைக்கவும்.
அடுத்து வாழைத்தண்டை நார் நீக்கி நன்றாக கழுவி நறுக்கவும். அடுத்து அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் புளிக்கரைசலை சேர்க்கவும். அடுத்து அதில் நறுக்கிய முள்ளங்கியையும், சின்ன வெங்காயத்தையும் வதக்கி சேர்க்கவும்.காய்கள் வெந்ததும், வெந்த துவரம் பருப்பை சேர்த்து, மசாலா பொடிகளை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு, கடலைப் பருப்பு தாளித்து இதில் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“