/indian-express-tamil/media/media_files/2025/05/20/88fJW6WAn0a8FrGK2SHB.jpg)
வல்லாரை சாப்பிடுவது ஞாபக சக்தியை அதிகரிக்குமா என்ற கேள்விக்கு டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளிக்கிறார். ஞாபக சக்தி எப்படி உருவாகிறது என்றால், இரண்டு நரம்புகளுக்கு நடுவில் ஒரு இணைப்பு உருவாகிறது. இந்த இணைப்பு நிரந்தரமாக இருக்கும்போது, அதிகமான விஷயங்கள் சேமிக்கப்படுகின்றன.
மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதத்தில் வல்லாரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், 12 வாரங்களுக்கு இரண்டு குழுக்களாகப் பிரித்து செய்த ஆய்வில், 90% சோதனைகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
ஞாபக சக்தியை அதிகரிக்க திரும்பத் திரும்ப செய்யறது முக்கியம். ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப படிக்கும்போது, அந்த சினாப்ஸ் நல்லா ஃபார்ம் ஆகும். சிலருக்கு ஒரு முறை படித்தாலே ஞாபகம் இருக்கும், சிலருக்கு நாலு முறை படிக்கணும். சாகுற வரைக்கும் படிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். ஒரு மூலிகையோ அல்லது மருந்தையோ நம்பி இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
படிக்கும் பசங்க இதை ஞாபகம் வச்சுக்க மாட்டேங்கிறாங்க. ஞாபக சக்தி அதிகரிக்கணும்னா நீங்க படிச்சுக்கிட்டே இருக்கீங்க இல்லையா அப்ப ஞாபக சக்தி அதிகரிக்காது. படிச்சு முடிச்சுட்டு நல்லா ஒரு ஏழு மணி நேரம் தூங்குனா அந்த தூங்குற டைம்ல தான் அந்த சினாப்சே ஃபார்ம் ஆகும். அதனால் நல்ல தூக்கம் கூட ஞாபக சக்தியை மேம்படுத்தும் என்று டாக்டர் கூறுகிறார். ஆனால் வல்லாரை சத்தான கீரை என்பதால் இதையும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.