/tamil-ie/media/media_files/uploads/2023/01/images-2021-05-29T131211.454.jpeg)
வழக்கமா நாம் கூழ்வத்தல் அல்லது வத்தல் செய்ய வேண்டும் என்றால் அதற்கென்றே நீண்ட செய்முறை இருக்கிறது. மேலும் வெயிலில் காய வைக்க வேண்டும். காகம் சாப்பிடாமல் இருக்க காவல் காக்க வேண்டும்.
இந்நிலையில் வெயிலில் வேக வைக்காமலேயே வத்தல் செய்ய முடியும். இரவில் பச்சரிசியை ஊற வையுங்கள். தொடர்ந்து அடுத்த நாள் அதை நன்றாக கழுவ வேண்டும். தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். தற்போது தோசை மாவைவிட கொஞ்சம் அதிகமான தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அதில் உப்பு மற்றும் சீரகம் சேருங்கள்.
இந்நிலையில் சின்ன சின்ன தட்டு மூடிகளை எடுத்துகொண்டு அதில். ஊற்ற வேண்டும் தொடர்ந்து அதை வத்த அளவில் தேய்க்க வேண்டும். இந்த தட்டுகளை இட்லி பாத்திரத்தில் சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
தொடர்ந்து அந்த தட்டுகளில் உள்ளவற்றை ஸ்பூன் பயன்படுத்தி எடுக்க வேண்டும். இந்நிலையில் இதை நாம் சேமித்து வைத்து எப்போது வேண்டுமோ அப்போது பொறித்துகொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.