/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-184129-2025-09-02-18-42-05.jpg)
வெஜ் புலாவ்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 1 கப்
கேரட் – 1 (நறுக்கியது)
பீன்ஸ் – 10 (நறுக்கியது)
பட்டாணி – 1/4 கப்
காளிபிலோவேர் – சிறிய கோப்பை அளவு
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – ௨
தாளிக்க:
இலவங்கம் – 2
கிராம்பு – 2, ஏலக்காய் – 2
பட்டை – 1 துண்டு
சோம்பு – 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிது (அலங்கரிக்க)
நெய் + எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1¾ கப் (அல்லது உபயோகிக்கும் அரிசிக்கு ஏற்ப)
செய்முறை:
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இலவங்கம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன்பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் மெல்லிய பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்க வேண்டும். பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸ், பூக்கோசு மற்றும் பட்டாணி போன்ற காய்கறிகளை சேர்த்து 3–4 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பிறகு, ஊறவைத்த அரிசியை வடிகட்டி சேர்த்து சிறிது நேரம் மெதுவாக கிளறி வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பும் தண்ணீரும் சேர்த்து நன்கு கிளறி, அடுப்பில் மிதமான சூட்டில் மூடி 10–12 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும் (அல்லது பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரை வைத்துக் கொள்ளலாம்). சாதம் வெந்து தயாரான பிறகு, கொத்தமல்லி இலை தூவி மெதுவாக கிளறி பரிமாறலாம்.
நல்லம்பட்டி சோயா கிரேவி:
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் (சோயா சங்ஸ்) - 1 கப்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (அல்லது காரத்திற்கு ஏற்ப)
தனியா தூள் - 1.5 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (கீறியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்புக்கு:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2.
செய்முறை:
மீல்மேக்கரை வெந்நீரில் 5–10 நிமிடங்கள் ஊறவைத்து, பின் நன்றாக பிழிந்து தனியாக வைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு போன்ற தாளிப்புப் பொருட்களை சேர்த்து பொரிய விட வேண்டும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இதன்பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து அது நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் உப்பும் சேர்த்து நன்கு கிளறி வதக்க வேண்டும். பிறகு, முன்பே ஊறவைத்து வைத்த மீல்மேக்கர் துண்டுகளைச் சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து 2–3 நிமிடங்கள் வதக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து, கொதிக்க விட வேண்டும். கிரேவி திக் பதத்தில் வந்ததும், மேல் கொத்தமல்லி தழை தூவி நறுமணமாக இருக்கும்போது அடுப்பை அணைத்து இறக்கலாம்.
இது இரண்டையும் உங்கள் வீக் எண்டு லஞ்ச் சமையலில் சேர்த்து பாருங்கள். கண்டிப்பாக குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.