கிராம்பு- 6-8 பட்டை - 4-5 ஏலக்காய்- 6-8 பச்சை மிளகாய்-4 சோம்பு- 2 டீஸ்பூன் பூண்டு- அரை கப் இஞ்சி- 60 கிராம் கசகசா- 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய்- 8 தேங்காய் கொத்தமல்லி- தேவையான அளவு புதினா- தேவையான அளவு
செய்முறை
Advertisment
Advertisements
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஏதும் ஊற்றாமல் கிராம்பு, பட்டை, ஏலக்காய் உடன் சீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து பூண்டு சேர்த்து, இஞ்சி, சோம்பு, பொட்டுக் கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு வறுக்கவும். அதன்பின் காய்ந்த மிளகாயையும் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். வறுக்கும் போது கொஞ்சம் கொத்தமல்லி, புதினா போடவும். சிறிது நேரம் கழித்து அரை மூடி தேங்காய் போட்டு அடுப்பை அணைக்கவும். இந்த மசாலா ஆறிய உடன் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
இதன்பின் வடை தயார் செய்ய கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து அரைக்கவும். இப்போது இந்த வடை பேஸ்டை எடுத்து அதில் பெருங்காய தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து இதை எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.
அடுத்தாக வடகறி குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி மீண்டும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். இப்போது அரைத்த மசாலா பேஸ்ட்டை போட்டு போட்டு வதக்கவும். அதன் பின் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு கலக்கவும். இவை எல்லாம் நன்கு கொதித்து வந்தபின் தயார் செய்து வைத்த வடையை போடவும். அவ்வளவு தான் சுவையான வடகறி ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news