பாக்யராஜுக்கு பிடித்தது; புது மாப்பிள்ளைக்கு ஏற்றது: வெங்கடேஷ் பட் ஸ்டைலில் சாம்பார் இப்படி ரெடி பண்ணுங்க!

பாக்யராஜுக்கு பிடித்த சாம்பாரை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். செஃப் வெங்கடேஷ் பட் ஈஸியாகவும் டேஸ்டியாகவும் சாம்பார் செய்து காட்டி இருக்கிறார்.

பாக்யராஜுக்கு பிடித்த சாம்பாரை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். செஃப் வெங்கடேஷ் பட் ஈஸியாகவும் டேஸ்டியாகவும் சாம்பார் செய்து காட்டி இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bagyaraj bhat

நடிகர் பாக்யராஜ் சொன்ன சாம்பார் கொஞ்சம் ஸ்பெஷல் தான். ஆனா அந்த ஸ்பெஷலான சாம்பாரை எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்  நடிகர் பாக்யராஜ் சொன்ன புது மாப்பிள்ளை சாம்பார் எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை 
கொத்தமல்லி 
சீரகம் 
உளுந்து 
வெந்தயம் 
நெய் 
மிளகாய் 
துவரம் பருப்பு 
பாசிப்பருப்பு 
கடுகு 
பச்சை மிளகாய் 
பூண்டு 
வெங்காயம் 
தக்காளி 
மஞ்சள் தூள் 
உப்பு 
கருவேப்பிலை 
புளி கரைசல் 

செய்முறை

Advertisment
Advertisements

இரும்புச்சத்து, புரதம், கால்சியம் என அனைத்து சத்துக்களும் கொண்ட சாம்பார்தான் இந்த புது மாப்பிள்ளை சாம்பார். இந்த புது மாப்பிள்ளை சாம்பார் என்பது முருங்கைக்கீரை வைத்து செய்யக்கூடிய சாம்பார் ஆகும். 

ஒரு கடாயில் கொத்தமல்லி எடுத்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் சீரகத்தையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். உளுந்து, மிளகு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக வறுத்துக் கொள்ளவும். நெய் சேர்த்து மிளகாயையும் வறுத்துக் கொள்ளவும். 

வறுத்த அனைத்தையும் ஆறவைத்து பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல முருங்கைக் கீரையையும் குச்சிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் நெய், காய்ந்த மிளகாய், கடுகு, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக இதில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கி வந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கவும். 

முருங்கைக்கீரை நன்கு வாடியதும் அதில் தண்ணீர் ஊற்றி வேக விடவும். இது ஒரு பத்து முதல் 12 நிமிடம் வேக விடவும். பின்னர் இதில் புளி தண்ணீரையும் ஊற்ற வேண்டும். புளிக்கரைசல் ஊற்றியதும் பருப்பையும் ஊற்றி கலந்து விடவும்.

கொதிவரும் போது அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி பச்சை வாசனை நீங்கியதும் இறக்கி விடலாம். மேலே நெய் விட்டு மூடிவிட்டால் அந்த ஆவியில் நெய் உருகி சாம்பாருடன் சேர்த்து சுவையாக இருக்கும்.

Sambar Recipe Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: