அரைச்சுவிட்ட சாம்பார் என்பது ஒரு பாரம்பரிய மற்றும் உண்மையான தமிழ்நாட்டின் சாம்பார் தயாரிக்கும் முறையாகும். புதிதாக அரைத்த சாம்பார் மசாலா, கடைகளில் வாங்கும் சாம்பார் தூளை விட சிறந்த நறுமணத்தையும், சுவையையும் தருகிறது. இந்த சாம்பார் சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் பரிமாற ஏற்றது. இதனை எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப் புளி - சிறிய நெல்லிக்காய் அளவு சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 1 கேரட் - 1 வெல்லம் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி இலை - 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகள் - 2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் மிளகு - ½ டீஸ்பூன் வெந்தயம் - ¼ டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 தேங்காய் - ¼ கப் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - ¼ டீஸ்பூன் கறிவேப்பிலை பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், புளியை தண்ணீரில் ஊறவைத்து கெட்டியான சாறு எடுக்கவும். துவரம் பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். 'அரைப்பதற்கு' கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை (தேங்காயைத் தவிர்த்து) சிறிதளவு எண்ணெய் விட்டு வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பின்னர், வறுத்த பொருட்கள் மற்றும் தேங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, மிக்சியில் நைசாக அரைத்து தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். தாளித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கறிகள் சற்று மென்மையாகும் வரை வதக்க வேண்டும். வதங்கியதும், கரைத்து வைத்துள்ள புளி சாறு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். புளி நன்கு கொதித்ததும், வேகவைத்த பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்துக் கிளறவும். சாம்பாரின் பதம் கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து சரிசெய்யலாம்.
சாம்பார் நன்கு கொதித்து, அனைத்து சுவைகளும் ஒன்றிணைந்ததும், இறுதியாக ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து கிளறி, அடுப்பை அணைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி, சூடாக பரிமாறவும்.