உடலுக்கு குளிர்ச்சி; நோய் எதிர்ப்பு சக்தி... தர்பூசணியில் பருப்பு சேர்த்து கூட்டு; இப்படி செய்து அசத்துங்க!

தர்பூசணி பழத்தை வைத்து சுவையான கூட்டு. இந்த சீசனில் அதிக தர்பூசணி பழங்கள் கிடைக்கும். அதனை வைத்து சுவையான கூட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தர்பூசணி பழத்தை வைத்து சுவையான கூட்டு. இந்த சீசனில் அதிக தர்பூசணி பழங்கள் கிடைக்கும். அதனை வைத்து சுவையான கூட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
watermelon koottu

காயில் கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். பழத்தில் கூட்டு செய்து சாப்பிட்டு இருக்கீர்களா? ஆம் சுவையான தர்பூசணி பழத்தில் கூட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த பழத்தில் கூட்டு செய்வது இனிப்பு சுவை இல்லாமல் தனியாக ஒரு சுவையை கொடுக்கும். எப்போதும் காய் சாப்பிடுவது போல் இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்:

தர்பூசணி (இடைப்பட்ட சதைப்பகுதி) - 3 கீற்றுகள்
பாசிப்பயறு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 4
தேங்காய் - பாதி மூடி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு 
கறிவேப்பிலை 
கடலை எண்ணெய்  
உப்பு  

செய்முறை:

Advertisment
Advertisements

தர்பூசணி கீற்றுகளிலிருந்து, நன்கு கனிந்த சிகப்புப் பகுதியையும், வெளிப்புறப் பச்சைத் தோலையும் நீக்கிவிடவும். பிறகு, அதற்கிடைப்பட்ட வெள்ளையான சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். பாசிப்பயறை ஊறவைத்துத் தயாராக வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை உருவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்துப் பொரிய விடவும். கடுகு பொரிந்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தர்பூசணித் துண்டுகள், ஊறவைத்த பாசிப்பயறு, மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அனைத்துப் பொருட்களையும் மூடி போட்டு நன்கு வேகவிடவும்.

தர்பூசணி மற்றும் பாசிப்பயறு நன்கு வெந்ததும், துருவிய தேங்காயைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான தர்பூசணி பாசிப்பயறு கூட்டு தயார். இந்தக் கூட்டு சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தர்பூசணி கூட்டு சாப்பாடு, ரசம், பருப்பு குழம்புடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். அதே சமயத்தில் தர்பூசணியை பழமாக நாம் அளவுக்கதிகமாக சாப்பிட கூடாது. தர்பூசணியை காலை உணவின் போது அல்லது காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம். இதைத் தவிர மாலை நேரங்களில் தர்பூசணி பழத்தை நாம் சாப்பிடலாம். ஆனால் இரவு நேரங்களில் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் சில நேரங்களில் வயிற்று சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகலாம். 

watermelon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: