மைதா மாவு நமது உணவில் பிரதான இடம் பெருகிறது. பிரட், பிஸ்கட், பேக்கரி பொருட்கள், ஸ்நாக்ஸ் ஆகியவையில் மைதா இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் மைதாவில் எந்தவித சத்துக்களும் இல்லை. இது வெறும் அதிக கலோரிகளை உடலுக்கு கொடுக்குகிறது.
இந்நிலையில் நாம் மைதாவை ஒரு மாதம் வரை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
ஜீரண சக்தி அதிகமாகும்: சுத்திகரிக்கப்பட்ட மைதாவில் நார்சத்து மற்றும் மற்ற சத்துக்கள் இல்லாததால், இவை ஜீரணிப்பதற்கு சிரமமாக இருக்கும். இந்நிலையில் இதை நாம் சாப்பிடாமல் இருந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். வயிறு உப்புதல் குறையும்.
சீரான ரத்த சர்க்கரை அளவு: இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட மைதா, நேரடியாக குளுக்கோஸாக மாறி, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதை சாப்பிடாமல் இருந்தால் ரத்த சர்க்கரை அளவு சீராகும். மேலும் உடல் இன்சுலினை ஏற்றுக்கொள்ள உதவும்.
உடல் எடை இழப்பு: இதில் அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகமாகும். மேலும் இதை சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும். மேலும் இதற்கு மாற்றாக தினை மாவை நாம் பயன்படுத்த வேண்டும்.
உடல் சக்தி அதிகரிப்பு: இந்நிலையில் நாம் சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவை சாப்பிட்டால், திடீரென உடல் சக்தி குறையும் நிலை ஏற்படும். மேலும் அதிக சோர்வு ஏற்படும். இந்நிலையில் நாம் தினை மற்றும் சிறுதானிய வகை மாவை எடுத்துக்கொண்டால், நீண்ட நேரத்திற்கு சீரான சக்தி கிடைக்கும்.
இந்நிலையில் மைதாவிற்கு பதிலாக முழு கோதுமை மாவு, கீன்வா மாவு, பாதாம் மாவு, தேங்காய் மாவு, ஓட்ஸ் மாவு, தினை மாவு, பிரவுன் ரைஸ் மாவு ஆகியவற்றை நாம் பயன்படுத்துலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“