குறைந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சுவையான, அடர்த்தியான இனிப்பு செய்யலாமா? இதோ எளிய செய்முறை!
Advertisment
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1 ¼ கப்
Advertisment
Advertisements
தண்ணீர் - ½ கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் கோதுமை மாவைச் சேர்க்கவும். மிதமான தீயில், மாவின் பச்சை வாசனை நீங்கி, லேசாக நிறம் மாறி, நல்ல மணம் வரும் வரை பொறுமையாக வறுக்கவும். நன்கு வறுத்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
வேறொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒன்றே கால் கப் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.
சர்க்கரைப் பாகு நன்றாகக் கொதித்து, சிறிதளவு பாகை எடுத்து விரல்களுக்கிடையில் வைத்தால், மெல்லிய ஒரு கம்பி போல் நீண்டு உடையும் பதத்திற்கு (ஒரு கம்பிப் பதம்) வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பாகு சரியான பதத்தில் இருக்கும்போது, வறுத்து வைத்திருக்கும் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கைவிடாமல் கிளறவும். மாவு கட்டியாகாமல், சமமாகப் பாகுடன் கலக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
கலவை நன்றாகக் கலந்து கெட்டியாக ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை நெய் பிரியாமல், நன்றாகச் சுருண்டு, பொரிந்தது போன்ற பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். தேவைப்பட்டால் இடையிடையே ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறலாம்.
கலவை நன்றாகச் சுருண்டு, திக்காகி, கடாயில் ஒட்டாமல் வரும்போது, மேலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு லேசாகத் திருப்பிவிட்டு எடுக்கவும்.
ஏற்கனவே பட்டர் பேப்பர் போட்டு, எண்ணெய் தடவிய ட்ரேயில் இந்த கலவையைச் சேர்க்கவும்.