/indian-express-tamil/media/media_files/2025/04/26/BkMrwQQoenVcsg6aH1mo.jpg)
உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் பலரும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டுள்ளனர்.
சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருந்து வரும் நிலையில், இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் நித்யா மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ, அல்லது அதிகரித்தாலே இரண்டுமே நீரிழிவு நோய் தான்.
சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மஞ்சள் பூசணி சாப்பிட வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதாவது மஞ்சள் பூசணியை கழுவி மேல் தோல் மற்றும் உள் விதை நீக்கிவிட்டு அப்படியே நறுக்கி ஒருநாளைக்கு 4 முதல் 5 பீஸ் சாப்பிடலாம்.
மேலும் மஞ்சள் பூசணியில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது , இது குடல் இயக்கத்தினை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. மஞ்சள் பூசணியில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன.
ஒருவரது உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் தான், அது கண் பிரச்சனைகளை உண்டாக்கும். ஆகவே மஞ்சள் பூசணியை சாப்பிட்டு வந்தால், கண் தொடர்பான பிரச்சனைகள் ஒரு மாதத்தில் குணமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.