அசல் விலையை குறைத்து மதிப்பிடுதல், நிலம் கையகப்படுத்துதல் செலவுகள், ஆள் பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற காரணங்களால் தமிழகத்தில் 16 உள்கட்டமைப்பு திட்டங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரயில்வே, பெட்ரோலியம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, எரிசக்தி அமைச்சகங்கள் ஆகியவை அமல்படுத்தி வரும் திட்டங்களும் எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஆகி வருகிறது.
உதாரணத்துக்கு, 16 உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அசல் செலவு ₹40,067 கோடி ஒதுக்கப்பட்டது.
தற்போது அவற்றை முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் செலவு ₹61,578 கோடி. இதன் மொத்தச் செலவு ₹21,511 கோடியைக் காட்டுகிறது. இது அசல் செலவில் 54% ஆகும். ஏப்ரல் 6 ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக ₹42,165 கோடி செலவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. எம் கே விஷ்ணு பிரசாத்துக்கு அளித்த பதிலில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறிய முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
திட்டங்கள் சரியான நேரத்தில் முடிவதில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதி, நிதி தடைகள், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சிக்கல்கள், உள்ளாட்சி அமைப்பு அனுமதி, பயன்பாட்டு மாற்றம், ஒப்பந்த சிக்கல்கள் மற்றும் கோவிட் காரணமாக தாமதங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
2024 தேர்தல் வியூகம்: டெல்லி சென்ற தென் மாநில முதல்வர்கள் கிங்கா? கிங் மேக்கரா?
உதாரணமாக, திண்டிவனம் மற்றும் நகரி இடையே புதிய ரயில் பாதை செப்டம்பர் 2006 இல் ரூ.582.8 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டது.
2010ல் நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கினாலும், ரயில்வே நிர்வாகம் இன்னும் முடிக்கவில்லை.
2025 ஆம் ஆண்டு தொடங்கும்போது திட்டச் செலவு ரூ.3,444 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil