டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது திடீரென வகுப்புறைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவத்தில் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்யக்கோரி டெல்லி காவல் துறைக்கும், கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கும் டெல்லி மகளிர் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இவ்விவகாரத்தை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகளிர் ஆணையம் கூற்றுப்படி, கடந்த மாதம் 30-ந்தேதி காலை பிரார்த்தனை முடிந்தபின் வகுப்பறையில் மாணவர்கள் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்துள்ளார். ஒரு மாணவியின் ஆடையை வலுக்கட்டாயமாக களைத்துவிட்டு, அந்த மாணவியிடம் ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளார். பின்னர் அடுத்து ஒரு மாணவியின் ஆடைகளைக் களைந்ததுடன், தனது ஆடைகளையும் அகற்றினார். பின்னர் அந்த நபர் வகுப்பறையின் கதவுகளை மூடிவிட்டு வகுப்பறைக்குள் மாணவர்கள் முன் சிறுநீர் கழித்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடமும், வகுப்பாசிரியரிடமும் மாணவிகள் கூறியுள்ளனர். ஆனால் அவர்களோ இதுகுறித்து வெளியே சொல்லாமல், மறந்துவிடுமாறு தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைது செய்ய சோதனை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். மேலும், சம்பவம் நடந்த தினமே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
வடகிழக்கு டிசிபி சஞ்சய் சைன் கூறுகையில், இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், விசாரணையை தொடங்கினோம். தனிப்படை அமைக்கப்படும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இது மாநகராட்சி நடத்தும் பள்ளியாகும் ஆனால் அங்கு வாசலிலோ அல்லது வளாகத்திற்குள்ளோ எங்கேயும் சிசிடிவி கேமராக்கள் இல்லை. மாணவிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. அவர்கள் சொன்ன அடையாளங்கள் வைத்து ஸ்கேட்ச் தயாரிக்கப்பட்டு, சந்தேகப்படும்படியான இருவரை கைது செய்துள்ளோம் என்றார்.
மகளிர் ஆணையம் எஃப்ஐஆர் நகல் மற்றும் விசாரணை எந்த கட்டத்தில் இருப்பது குறித்த ரிப்போர்டை காவல் துறையிடம் கோரியுள்ளது. மேலும், பள்ளி தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் மீதும் ‘போக்சோ’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த விஷயத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தையும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil