New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/04/india-pakistan.jpg)
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
Advertisment
ஜம்மு காஷ்மீர், ராஜோவ்ரி மாவட்டத்தின் சுந்தர்பானி என்ற பகுதியில் இன்று காலை திடீரென பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிசர்வதேச எல்லைப்பகுதியி்ல் பாகிஸ்தான் ராணுவம் இந்தத் தாக்குதல் நடத்தியது.
சுந்தர்பானி பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் வினோத் சிங் மற்றும் ஜாக்கி ஷர்மா ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை இந்திய ராணுவம் அனுப்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.