/tamil-ie/media/media_files/uploads/2018/09/New-Project-68.jpg)
ஐஎஸ் தீவிரவாதிகள்
டெல்லி செங்கோட்டை அருகே பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ் தீவிரவாதிகள் :
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்துவதற்காக பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் சதி செய்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, அனைவரின் செயல்களுடம் கவனிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் டெல்லி செங்கோட்டை அருகே,நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து வந்த 2 ஐஎஸ் தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இருவரும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து ஆயுத பயிற்சி பெற்றவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
அவர்களை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் அவர்கள் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.மேலும் டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.