உத்தரபிரதேசத்தில் தன் காதலருடன் சென்றதால், 21 வயது இளம்பெண்ணை அவரது தந்தை மற்றும் சகோதரரே பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரையும் காவல் துறையினர் கைது செய்த சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண், தன் வீட்டருகே வசிக்கும் கயாசுதீன் என்ற (வயது 34) என்பவரை காதலித்து வந்துள்ளார். கயாசுதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், இருவரும் கடந்த ஜூலை மாதம் அந்நபருடன் சென்றுவிட்டார். இதையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தார் தன் மகளை அந்நபர் கடத்திவிட்டதாக நீதிமன்றத்தை நாடினர். அப்போது, தான் அவரை காதலிப்பதாகவும், அவருடன் செல்லவே விருப்பமிருப்பதாகவும் அப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்ததால் வழக்கு தள்ளுபடியானது.
இதன்பின், மீண்டும் அப்பெண் கடந்த அக்டோபர் மாதம் அந்நபருடன் இணைந்து வாழ முடிவெடுத்து அவருடன் சென்றுவிட்டார். அப்போது மீண்டும் அப்பெண்ணின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். ஆனால், இம்முறை அப்பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கே சென்றுவிட்டார். அதில், தன்னை தன் தந்தையும் சகோதரரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனால் தன் கரு கலைந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையடுத்து, அப்பெண்ணின் தந்தை ஹக்கிம், சகோதரர் சபீர், உறவினர் சமீன், மற்றும் ஆஷு ஆகியோர் மீது கடந்த 18-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், அவர்கள் நால்வரும் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, தன் குடும்பத்தினர் குற்றமற்றவர்தான் என அப்பெண்ணின் தாய் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.