Advertisment

பா.ஜ.க அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள்; ஹரியானாவில் நெருக்கடி

ஹரியானாவில் ஆளும் கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்று, காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள்; பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி

author-image
WebDesk
New Update
haryana mlas

பா.ஜ.க அரசின் ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு, மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை சந்தித்தனர். (எக்ஸ்பிரஸ்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஹரியானாவில் லோக்சபா தேர்தல் இன்னும் பதினைந்து நாட்களில் வரவுள்ள நிலையில், மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மாநிலத்தில் பா.ஜ.க அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு "வெளியில்" ஆதரவை வழங்கினர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: 3 Independents cross sides, Haryana BJP govt teeters ahead of Lok Sabha polls

இதனால், பா.ஜ.க,வுக்கு, தற்போது 40 எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் இடம்பிடித்துள்ளனர். சபையின் பலம் 88 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 45. தற்போது, பா.ஜ.க அரசுக்கு இப்போது 43 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது, இருப்பினும் தேவைப்பட்டால் நான்கு ஜனநாயக்க ஜனதா கட்சி எம்.எல்.ஏ.,க்களும் அரசாங்கத்திற்கு தந்திரோபாய உதவி வழங்கலாம் என்று பா.ஜ.க செவ்வாயன்று கூறியது. இதனால் அதன் பலம் 47 ஆக அதிகரிக்கிறது.

செவ்வாயன்று அணி மாறிய மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான தரம்பால் கோந்தர் (நிலோகேரி), ரந்தீர் கோலன் (புண்ட்ரி) மற்றும் சோம்பிர் சங்வான் (தாத்ரி) ஆகியோர் ரோஹ்டக்கில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா முன்னிலையில் தங்கள் முடிவை அறிவித்தனர்.

உடனே ஹூடா கூறியதாவது: பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த அரசு பதவி விலக வேண்டும். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

ஹரியானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், மே 25 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று ஹரியானா பா.ஜ.க தலைவர் உதய் பன் கோரினார். "சைனிக்கு ஒரு கணம் கூட அரசாங்கத்தில் நீடிக்க உரிமை இல்லை." என்றும் அவர் கூறினார்.

நடந்தவற்றுக்கு காங்கிரஸின் சூழ்ச்சியே காரணம் என்று முதல்வர் சைனி குற்றம் சாட்டினார். “சில எம்.எல்.ஏ.,க்களுக்கு சில லட்சியங்கள் இருக்கும். இந்த நாட்களில், காங்கிரஸ் வெளிப்படையாக (அப்படிப்பட்டவர்களின்) ஆசைகளை நிறைவேற்றுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். யாருக்கு என்ன லட்சியம் என்பதும் தெரியும். மக்களின் தேவைக்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் தங்கள் லட்சியங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள், ”என்று சைனி கூறினார்.

அவையின் மொத்த பலம் 90 ஆக உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் முன்பு ராஜினாமா செய்ததால், தற்போது அது 88 ஆக உள்ளது. கர்னால் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் வேட்பாளராகவும், ஹிசார் தொகுதியில் பா.ஜ.க சார்பில் சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருந்த ரஞ்சித் சிங் சவுதாலாவும் போட்டியிடுகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க துஷ்யந்த் சௌதாலாவின் ஜே.ஜே.பி.,யுடன் உறவை முறித்துக் கொண்டது, அவருடைய 10 எம்.எல்.ஏ.,க்கள் 2019 இல் அரசாங்கத்தை அமைக்க உதவினார்கள். ஜே.ஜே.பி.,யின் 10 எம்.எல்.ஏ.,க்களில் குறைந்தது ஆறு பேர் சௌதாலாவிடம் இருந்து விலகிவிட்டனர்.

மக்களவையில் காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மூன்று சுயேச்சைகளின் ஆதரவால் அதன் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

பா.ஜ.க அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துவிட்டது என்ற காங்கிரஸின் கூற்றுக்களை நிராகரித்த சைனியின் ஊடகச் செயலர் பிரவீன் அட்ரே இந்தியன் எக்ஸ்பிரஸிடம், பா.ஜ.க.,வின் சொந்த 40 எம்.எல்.ஏ.,க்களைத் தவிர, அக்கட்சிக்கு இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான நயன் பால் ராவத் மற்றும் ராகேஷ் தௌல்தாபாத், ஹரியானா லோகித் கட்சியின் (HLP) கோபால் காந்தா; மற்றும் நான்கு ஜே.ஜே.பி எம்எல்ஏக்கள், தேவேந்திர சிங் பாப்லி, ராம் குமார் கவுதம், ஜோகி ராம் சிஹாக் மற்றும் ராம் நிவாஸ் சுர்ஜகேரா ஆகியோரின் ஆதரவு உள்ளது என்று கூறினார்.

"இதனால் பா,ஜ,க அரசுக்கு 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது, 45 என்ற எளிய பெரும்பான்மைக்கு எதிராக போதுமான ஆதரவு உள்ளது," என்று அட்ரே கூறினார்.

பா.ஜ.க.,வில் இருந்து காங்கிரஸுக்கு மாறிய சுயேச்சைகளில் ஒருவரான கோலன் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளாக பா.ஜ,க அரசுக்கு நேர்மையாக ஆதரவு அளித்து வருகிறோம். ஆனால் இன்று, பணவீக்கமும் வேலையின்மையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது, அதே நேரத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், ஊழியர்கள்... அனைவரும்... குடும்ப ஐ.டி மற்றும் சொத்து ஐ.டி கருத்தாக்கத்தால் வருத்தமடைந்துள்ளனர். அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக குடும்பங்களுக்கு ஒரே அட்டையாக கட்டார் அரசாங்கத்தால் அடையாள அட்டைகள் தொடங்கப்பட்டன.

அவர்களின் முடிவை "சந்தர்ப்பவாதமாக" பார்ப்பது தவறு என்று கூறிய கோலன், அது உண்மையில் "பொதுமக்களின் குரலின் பிரதிபலிப்பு" என்றும் கூறினார்.

2020-21 விவசாயிகளின் போராட்டத்தின் போது, செவ்வாய்க்கிழமை அணி மாறிய சுயேச்சைகளில் ஒருவரான சங்வான், அப்போதைய பா.ஜ,க-ஜே.ஜே.பி அரசாங்கத்திற்கு ஆதரவை வாபஸ் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் அனைவரும் அந்த நேரத்தில் (விவசாயிகள் போராட்டம்) விதானசவுதாவில் அரசாங்கத்தை எதிர்த்தோம். நாங்கள் அரசாங்கத்தின் நல்ல விஷயங்களை ஆதரித்த அதே வேளையில், விதானசபாவில் மற்ற பிரச்சினைகளிலும் குரல் எழுப்பினோம்," என்று கோலன் கூறினார், எந்த "அழுத்தத்தையும்" மறுத்து அவர்கள் "சுயாதீனமானவர்கள்" என்பதை கோலன் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

விவசாயிகள் போராட்டத்தின் போது கட்டார் அரசுக்கு எதிரான தனது எதிர்ப்பைப் பற்றியும் பேசிய சங்வான், மேலும் ஒரு எம்.எல்.ஏ அவர்களுடன் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் முடியவில்லை என்றும் கூறினார்.

இப்போது காங்கிரஸ் அணியில் உள்ள மூன்றாவது சுயேட்சை கோந்தர், கோலன், சங்வான், அவரும் மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ., நயன் பால் ராவத்தும், கட்டார் முதல்வராக இருக்கும் வரை பா.ஜ.க அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். சைனி சரியாக செயல்படவில்லை. "எங்கள் சேனாபதி (கட்டார்) சென்றபோது, அது எங்களுக்கு வலித்தது." என்று கோந்தர் கூறினார்.

மூன்று எம்.எல்.ஏ.க்களின் முடிவைப் பாராட்டிய ஹூடா, தற்போதைய ஆட்சியில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதையே இது காட்டுகிறது என்றார். "அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளனர்... மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வாக்களிக்க மக்கள் தங்கள் மனதை உறுதி செய்துள்ளனர்." என்றும் ஹூடா கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Congress Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment