/indian-express-tamil/media/media_files/kBtockOcEGq9igSrAUYl.jpg)
ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளின் இரவில் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்ட ராணுவப் பிரிவு X தளப் பதிவில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட X பதிவில், பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்த உளவுத் தகவலை அடுத்து மச்சல் மற்றும் தங்தார் பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.
மோசமான வானிலை நிலவிய சூழலில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் இயங்கியது உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்று கூறியது.
தங்தார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இரு இடங்களிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இது தொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், "ரஜோரி மாவட்டத்தில் உள்ள கேரி மொஹ்ரா லத்தி மற்றும் தண்டல் கிராம பகுதியில் புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில் பாதுகாப்புப் படையினரால் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சுமார் 11.45 மணி அளவில் பயங்கரவாதிகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.