Advertisment

உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை

3 பெண் நீதிபதிகளில் ஒருவரான கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்னா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரக்கூடும்.

author-image
WebDesk
New Update
women-judges

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பல்வேறு தாமதங்கள் நிலவி வந்தநிலையில் தற்போது கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம் செவ்வாய்க்கிழமை 9 நீதிபதிகள் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. இந்த பட்டியலில் மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர்.

முதல் முறையாக கொலிஜியம் மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பிவி நாகரத்னா, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பெலா திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகளும் இதில் அடக்கம். இதில் நீதிபதி நாகரத்னா இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வர வாய்ப்புள்ளது.

நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. மார்ச் 2019 முதல் கொலீஜியம் உறுப்பினராக இருந்த நீதிபதி நாரிமன், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் உள்ள இரண்டு மூத்த நீதிபதிகள் வரை பெயர்களில் எந்த ஒருமித்த கருத்தும் வெளிவர முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். கர்நாடக உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷி முதலில் பரிந்துரைக்கப்பட்டனர்.

நீதிபதிகள் ஓகா, குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் மற்றும் சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே கே மகேஸ்வரி ஆகியோரை கொலிஜியம் தேர்வு செய்துள்ளது.

தற்போது நாட்டின் மிக மூத்த உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி ஓகா, சிவில் உரிமை குறித்த தனது தீர்ப்புகளுக்கு பெயர் பெற்றவர். கொரோனா தொற்று காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பல வழக்குகளில் தொற்றுநோயை அரசு கையாள்வது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தொற்றுநோயைக் கையாள்வதில் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு நீதிபதி நாத் தலைமை தாங்கினார். மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாதது மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பினார். கொரோனா நெருக்கடி குறித்த விசாரணைகளை யூடியூபில் ஸ்ட்ரீமிங் செய்த அவர், நீதிமன்ற அறையின் முதல் நேரடி ஒளிபரப்பை கொண்டு வந்தார்.

ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மகேஸ்வரி, கடந்த ஆண்டு டிசம்பரில் சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தனது அரசை கவிழ்க்க உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டில் தலையிடுவதாக குற்றம் சாட்டிய பிறகு மாற்றப்பட்டார்.

கேரள உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி சி டி ரவிக்குமார் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் எம் எம் சுந்தரேஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்ட மற்ற நீதிபதிகள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஎஸ் நரசிம்மா பெயரையும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மூத்த வழக்கறிஞரான இவர் ராமஜென்ம பூமி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார். மேலும் இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக பிசிசிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

கொலிஜியம் அனுப்பிய 9 நீதிபதிகள் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை உச்ச நீதிமன்றத்தில் 33 ஆக உயரும். அடுத்தவாரம் புதன்கிழமை நீதிபதி நவின் சின்ஹா ஓய்வு பெற்றால், கூடுதலாக இடம் காலியாகும்

CJI ரமணா தவிர, ஐந்து உறுப்பினர்கள் கொண்ட கொலீஜியத்தில் நீதிபதிகள் U U லலித், A M கான்வில்கர், DY சந்திரசூட் மற்றும் L நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்குவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Collegium
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment