scorecardresearch

வட கிழக்கு மாநிலங்களில் தேர்தல்; ஜனவரியில் 30% தேர்தல் பத்திரங்கள் கொல்கத்தாவில் விற்பனை – எஸ்.பி.ஐ

மொத்தம் 437 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன, இதில் தலா ரூ.1 கோடியில் 300 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. கொல்கத்தா கிளை ரூ.98.50 கோடியுடன் அதிக விற்பனை செய்துள்ளது – ஆர்.டி.ஐ தகவல்

வட கிழக்கு மாநிலங்களில் தேர்தல்; ஜனவரியில் 30% தேர்தல் பத்திரங்கள் கொல்கத்தாவில் விற்பனை – எஸ்.பி.ஐ
இதுவரை விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ரூ. 12,008.59 கோடி

Damini Nath

இம்மாதம் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஜனவரி மாதம் ரூ.308.76 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது, கொல்கத்தா கிளையில் சுமார் 30 சதவீத விற்பனையும், புது டெல்லி கிளையில் பெறப்பட்ட மொத்த மதிப்பில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக பணமாக்குதலும் செய்யப்பட்டுள்ளது, என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற தரவுகள் காட்டுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கேள்விக்கு புதன்கிழமை பதிலளித்த எஸ்.பி.ஐ, இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில், இந்த ஆண்டு ஜனவரி 19-28 வரையிலான 25வது தவணையின் போது எட்டுக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை நடைபெற்றதாகக் கூறியது.

இதையும் படியுங்கள்: ராகுல் – வருண்; ஒரே எண்ணம் கொண்டவர்களை ஒன்று திரட்டும் சகோதரர்கள்

மொத்தம் 437 பத்திரங்கள் விற்கப்பட்டன, இதில் கிடைக்கக்கூடிய அதிகபட்ச மதிப்பு பத்திரமான தலா ரூ.1 கோடியில் 300 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. கொல்கத்தா கிளை ரூ.98.50 கோடியுடன் அதிக விற்பனை செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கியதில் இருந்து அதிக விற்பனையை கண்ட மும்பை கிளை, 60.20 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தேர்தல் பத்திரங்கள் விற்பனை குறித்த தகவல்கள்

இந்த முறை, நவம்பர் 2022 (நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் 2018, ரூ.676.2 கோடி) குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது விற்பனை செய்யப்பட்ட மொத்த மதிப்பில் பாதிக்குக் குறைவாக விற்பனைத் தொகை இருந்தது, என ஆர்.டி.ஐ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமாக்குவதைப் பொறுத்தவரை, ​​ஆறு கிளைகளில் 429 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. மொத்த மதிப்பில் ரூ. 26,000 தவிர மற்ற அனைத்தும் பணமாக்கப்பட்டன. பார்லிமென்ட் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ கிளையில் ரூ. 193.71 கோடி பணமாக மாற்றப்பட்டதன் மூலம் புதுடெல்லி கிளை முதன்மை தேர்வாக உள்ளது. கொல்கத்தா கிளையில் 25வது தவணையாக ரூ.80.50 கோடி பணமாக்கப்பட்டது.

ஆர்.டி.ஐ பதிலின்படி, இதுவரை விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூ. 12,008.59 கோடியில், மும்பையில் ரூ.3,225.77 கோடியும், புதுடெல்லியில் (ரூ.11,984.91 கோடியில் ரூ.7,797.04 கோடி) அதிக அளவிலும் பணமாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: 30 of poll bonds sold in jan were in kolkata sbi

Best of Express