Advertisment

35 சிம் கார்டுகள், போலி ஆதார், ஓட்டுநர் உரிமங்கள்; பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மறைந்து இருந்தது எப்படி?

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குற்றவாளிகள் இருவரும் அடிக்கடி ஹோட்டல்களை மாற்றிக் கொண்டே இருந்தனர், மேலும் டிஜிட்டல் பாதையை விட்டு பணப்பரிமாற்றங்களை மட்டுமே செய்தனர் – என்.ஐ.ஏ விசாரணையில் கண்டுபிடிப்பு

author-image
WebDesk
New Update
bengaluru cafe accused

அத்புல் மதீன் தாஹா (இடது) மற்றும் முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோர் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள அவர்களின் மறைவிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். (கோப்புப் படங்கள்: X/@NIA_India)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Atri Mitra

Advertisment

35 சிம் கார்டுகளைத் தவிர மகாராஷ்டிரா முதல் கர்நாடகா வரை தமிழ்நாடு வரையிலான முகவரிகளுடன் ஆதார் அட்டைகள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் போன்ற போலி அடையாள ஆவணங்கள், பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக புலனாய்வாளர்களிடமிருந்து தப்பிக்க உதவியது என்று விசாரணையை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆங்கிலத்தில் படிக்க: 35 SIM cards, fake Aadhaar, driving licences — how Bengaluru cafe blast accused evaded the law

வெள்ளிக்கிழமை, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் ஐ.இ.டி வெடிகுண்டை வைத்ததாகக் கூறப்படும் முசாவிர் உசேன் ஷாசிப் (30) மற்றும் தாக்குதலைத் திட்டமிட்டு பின்னர் தப்பிச் சென்ற அத்புல் மதீன் தாஹா (30) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தது. கொல்கத்தாவில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புர்பா மேதினிபூரில் உள்ள திகாவில் இருந்து இருவரும் பிடிபட்டனர்.

சனிக்கிழமையன்று, பெங்களூருவில் உள்ள பயங்கரவாத சிறப்பு நீதிமன்றம் இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் வைக்க என்.ஐ.ஏ.,வுக்கு அனுமதி வழங்கியது. தாஹா மற்றும் ஷாசிப் ஆகியோர் ட்ரான்சிட் வாரண்ட் மூலம் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், அவரது இல்லத்தில் சிறப்பு பயங்கரவாத நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை 10 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் என்.ஐ.ஏ.,வுக்கு அனுமதி அளித்துள்ளது என்று என்.ஐ.ஏ.,வின் சிறப்பு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இருவரும் ஏறக்குறைய மூன்று வாரங்கள் மேற்கு வங்கத்தில் தங்கியிருந்தனர், பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில், ராடார் இல்லாத ஹோட்டல்களில், மற்றும் அடிக்கடி மாற்றுப்பெயர்களை மாற்றிக்கொண்டனர். இறுதியாக அவர்கள் பிடிபட்ட திகாவைத் தவிர, அவர்கள் கொல்கத்தா, புருலியா மற்றும் டார்ஜிலிங் ஆகிய இடங்களில் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது, என இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, கொல்கத்தாவில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் தங்கியிருந்தபோது, மகாராஷ்டிராவின் பால்கரைச் சேர்ந்த யுஷா ஷாநவாஸ் படேல் என்ற பெயரில் போலி ஆதார் அட்டையை ஷாசிப் பயன்படுத்தினார். மறுபுறம், தாஹா, ஒரு ஹோட்டலில் கர்நாடகாவைச் சேர்ந்த விக்னேஷ் பி.டி மற்றும் மற்றொரு ஹோட்டலில் அன்மோல் குல்கர்னி போன்ற போலி பெயர்களைப் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

மற்றொரு ஹோட்டலில், அவர்கள் முறையே ஜார்கண்ட் மற்றும் திரிபுராவில் வசிக்கும் சஞ்சய் அகர்வால் மற்றும் உதய் தாஸ் என்ற மாற்றுப்பெயர்களில் தங்கி இருந்தனர்.

என்.ஐ.ஏ வட்டாரங்களின்படி, இருவரும் அடிக்கடி ஹோட்டல்களை மாற்றிக் கொண்டே இருந்தனர், மேலும் வெளிபடுத்தலை தவிர்க்க டிஜிட்டல் பாதையை விட்டு பணப்பரிமாற்றங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்தபடி, கண்டறிதலைத் தவிர்க்க, தாஹா கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைக்கு நிதியளித்தார். "இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் திருடப்பட்ட அடையாளங்கள் மற்றும் ஐ.டி.,கள் உட்பட பல்வேறு வழிகளை அவர் பயன்படுத்தினார், குண்டுவெடிப்புக்கான தளவாடங்களை ஏற்பாடு செய்வதற்காக ஷரீப்புக்கு கிரிப்டோகரன்சியை மாற்றினார்," என்று ஒரு அதிகாரி கூறினார், தாஹா ஒரு ஐ.டி பட்டதாரி.

மேலும், புலனாய்வாளர்களை தங்களை பின் தொடர்வதை தவிர்க்க, இருவரும் தாராளமாக சிம் கார்டுகளை மாற்றி வந்துள்ளனர், அவர்கள் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் குறைந்தது 35 சிம் கார்டுகளைப் பயன்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 27 அன்று கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான முஸம்மில் ஷரீப் (30), செல்போன்கள், போலி சிம் கார்டுகள் மற்றும் குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு செயல்படுத்தப் பயன்படுத்திய பிற பொருட்கள் போன்ற தளவாடங்களை வழங்கியதாக புலனாய்வாளர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர். 

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல்களில் இருவரும் தங்கியிருந்த சி.சி.டி.வி (CCTV) காட்சிகளையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கொல்கத்தாவில் இருந்த காலத்தில், எஸ்பிளனேட், கிதிர்பூர் மற்றும் எக்பால்பூர் போன்ற பகுதிகளில் நேரத்தை செலவிட்டதாக நம்பப்படுகிறது. இவர்களுக்கு மேற்கு வங்கத்தில் கூட்டாளிகள் இருக்கிறார்களா என்றும், அவர்கள் ஏன் அந்த மாநிலத்தை தங்குவதற்கு தேர்வு செய்தார்கள் என்றும் விசாரணை நடத்தி வருவதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bengaluru Nia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment