Advertisment

கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர்; போலீஸ் செய்த சம்பவம்!

புதுச்சேரி வில்லியனூர் அருகே வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
4 people were arrested for sneaking in Puducherry with a knife

புதுச்சேரியில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரி வில்லியனூர் அருகே புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து எஸ்பி வம்சித ரெட்டி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த கும்பலை அதிரடியாக மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

போலீசார் விசாரணையில், கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் தமிழக பகுதியான கடப்பேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த சுனில்,சுபாஷ், மனோஜ் என்பதும் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளை மடக்கி வழிப்பறி செய்ய திட்டமிட்டு பதுங்கியிருந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment