New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/kerala1-1.jpg)
கேரள வெள்ள சேதாரம்
கேரளத்தை மீட்டெடுக்கும் அரசு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவினையும் அளிப்போம் - எதிர் கட்சியினர்
கேரள வெள்ள சேதாரம்
கேரள வெள்ள சேதாரம் : கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது கேரளம். பொருளாதார வகையில் எப்படியான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது கேரளா என பட்டியலிட்டு கூறியிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகள், மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கேரளாவில் நடைபெற்றது.
மிகவும் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நாங்கள் மிகப் பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளோம். உங்களின் பணிக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் மறுசீரமைப்பும் கட்டுமானப் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மிக விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு, கேரளத்தினை மீட்டெடுக்கும் திட்டங்கள் தொடர்பாக கருத்துகள் கேட்கப்படும் என்று கூறினார் பினராயி விஜயன்.
அதே சமயத்தில் கேரள காங்கிரஸ்ஸின் துணைத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான விடி சதீஸன் “தேவையில்லாமல் அணைகளில் இருந்து நீரை திறந்துவிட்டதன் விளைவாகவே இது போன்ற நிலை ஏற்பட்டது.
இது முற்றிலுமாக மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளம் தான்” என்று குற்றம் சாட்டினார். இருப்பினும் மக்களுக்குத் தேவையான உதவிகளை கேரள அரசு முன்னெடுக்கும் போது அரசிற்கு முழு ஆதரவினையும் தருவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.