Advertisment

மும்பை ஏர்போர்ட் கைமாறியது எப்படி? பாராளுமன்றத்தில் அதானி குறித்து ராகுல் எழுப்பிய 5 கேள்விகள்

மக்களவையில் ராகுல் காந்தி தனது உரையில், கடந்த 8 ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
5 things Rahul Gandhi said in Parliament about Adani Group

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி

தொழிலதிபர் கௌதம் அதானியுடன் தொடர்பு இருப்பதாகக் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (பிப்.7) கடுமையாகத் தாக்கினார். மக்களவையில் தனது உரையில், கடந்த 8 ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி குறித்தும் காந்தி கேள்வி எழுப்பினார்.

Advertisment

மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது:

1) அதானி குழுமத்தின் நிகர மதிப்பு US $8 பில்லியனில் இருந்து US $140 பில்லியனாக உயர்ந்தது, 2014-ல் பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்திலிருந்து 2022-ல் 2-வது இடத்தைப் பிடித்தது. பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம் மக்களிடம் இதைக் கேட்டேன்.

2) “தொழில் அதிபர் கெளதம் அதானிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நெருக்கம் உள்ளது. பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்று வந்த மந்திரத்தால் எஸ்பிஐ அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடனை வழங்குகிறது.

பின்னர் அவர் பங்களாதேஷுக்குச் செல்கிறார், பின்னர் பங்களாதேஷ் மின் மேம்பாட்டு வாரியம் அதானியுடன் 25 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

2022 ஆம் ஆண்டில், இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் இலங்கையில் உள்ள நாடாளுமன்றக் குழுவிடம், தனக்கு பிரதமரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவித்தார்.

காற்றாலை மின் திட்டத்தை மோடி அதானிக்கு வழங்குவார்” என்று ராகுல் காந்தி கூறினார்.

தொடர்ந்து, அதானியுடன் நீங்கள் (மோடி) எத்தனை முறை ஒன்றாக (வெளிநாட்டு பயணத்தில்) பயணம் செய்திருக்கிறீர்கள்? உங்களின் வெளிநாட்டுப் பயணத்தில் அதானிஜி எத்தனை முறை உங்களுடன் சேர்ந்துள்ளார்? நீங்கள் வெளிநாட்டில் இறங்கிய பிறகு அவர் எத்தனை முறை சென்றடைந்தார்? நீங்கள் அங்கு சென்ற பிறகு அதானிஜி வெளிநாட்டுக்கு எத்தனை முறை ஒப்பந்தம் செய்துள்ளார்?” என்றார்.

3)விமான நிலையங்களில் முன் அனுபவம் இல்லாதவர்கள் முன்பு விமான நிலையங்களின் வளர்ச்சியில் ஈடுபடவில்லை. மேலும் அவர், “இந்த விதி மாற்றப்பட்டு அதானிக்கு ஆறு விமான நிலையங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு இந்தியாவின் மிகவும் இலாபகரமான விமான நிலையமான ‘மும்பை ஏர்போர்ட்’ ஜிவிகே குழுவிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்டது.

சிபிஐ, இடி போன்ற ஏஜென்சிகளைப் பயன்படுத்தி, இந்திய அரசாங்கத்தால் அதானிக்கு வழங்கப்பட்டது.

4) அதானி துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும், "நான்கு பாதுகாப்பு ஒப்பந்தங்கள்" எப்படி கிடைத்தது என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.

5) அதானிக்கு எதிரான ஹிண்டன்பேர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள், குழுமத்துடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு ஷெல் நிறுவனங்கள் உட்பட, காங்கிரஸ் தலைவர் அவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Rahul Gandhi Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment