Advertisment

3 வாரத்தில் 6 பேர் பலி; இந்தக் கடலில் குளித்தால் அபராதம்?

புதுச்சேரி கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடலில் கடந்த 20 நாள்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Puducherr

புதுச்சேரி கடற்கரையில் கடந்த 20 நாள்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

புதுச்சேரியில் கடந்த ஆண்டு மட்டும்  பல்வேறு கடற்கரைகளில்  மூழ்கி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில், 2024 ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் கடலில் குளித்த 4 பேர் மாணவர்கள், அடுத்தடுதது இருவர் என கடந்த 20 நாள்களில் மட்டும் 6 பேர் மரணித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு கடலில் குளிக்க தடை விதித்துள்ளது. எனினும், தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதை பார்க்க முடிகிறது.

இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது.

அண்மை காலமாக கடலில் மூழ்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment