இந்திய எதிர்ப்புக் குழுவில் சில நீதிபதிகள்.. அரசுக்கு எதிராக நீதித்துறையை திருப்ப முயற்சி.. கிரண் ரிஜிஜு

இந்திய எதிர்ப்புக் கும்பலின் ஒரு பகுதி போல் சில நீதிபதிகள் செயல்படுகின்றனர் என சட்டத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜு கூறினார்.

இந்திய எதிர்ப்புக் கும்பலின் ஒரு பகுதி போல் சில நீதிபதிகள் செயல்படுகின்றனர் என சட்டத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜு கூறினார்.

author-image
WebDesk
New Update
A few retired judges part of anti-India gang trying to turn judiciary against government Kiren Rijiju

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

"இந்திய எதிர்ப்பு கும்பலின்" ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறையை எதிர்க்கட்சியாக நடிக்க வற்புறுத்துகிறார்கள் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (மார்ச் 18) தெரிவித்தார்.

Advertisment

இது குறித்து அவர், “சமீபத்தில் நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. ஆனால் அதிகாரம் நீதித்துறையை எப்படி பாதிக்கிறது என்று கருத்தரங்கம் முழுவதுமாக மாறியது.
சில நீதிபதிகள் ஆர்வலர்களாகவும், எதிர்க்கட்சிகளைப் போல நீதித்துறையை அரசாங்கத்திற்கு எதிராக மாற்ற முயற்சிக்கும் இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்,

நீதித்துறை நடுநிலையானது மற்றும் நீதிபதிகள் எந்தக் குழுக்கள் அல்லது அரசியல் சார்புகளின் பகுதியாக இல்லை. இந்திய நீதித்துறை (அரசாங்கத்தை தலையிட வேண்டும்) என்று இவர்கள் எப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும்?” என்றார்.

தொடர்ந்து இந்திய அரசியல் குறித்து டெல்லியில் நடந்த இந்தியா டுடே மாநாட்டில் சட்ட அமைச்சர் பேசினார். அப்போது அவர், “யாராவது, ராகுல் காந்தியோ அல்லது யாரேனும் இந்திய நீதித்துறை அபகரிக்கப்பட்டுவிட்டது என்றோ அல்லது நாட்டில் ஜனநாயகம் முடிந்துவிட்டது என்றோ… நீதித்துறை இறந்து விட்டது என்று சொன்னால், அதன் அர்த்தம் என்ன?

Advertisment
Advertisements

இந்திய நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால்தான், இந்திய நீதித்துறையை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சிப்பதாக அவர்கள் நாளுக்கு நாள் கூற முயல்கின்றனர்.

தொடர்ந்து, “என்னிடம் இப்போது சில பெயர்கள் உள்ளன, ஒவ்வொரு பெயருக்கும் சக நீதிபதிகள், பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் நிறைய புகார்கள் உள்ளன.
நான் அதை பகிரங்கப்படுத்தவில்லை. ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு எதிராக எதிர்மறையான கருத்தை எழுதியிருந்தால், அதை நான் பகிரங்கப்படுத்தக் கூடாது. பொது வாழ்வில் கொஞ்சம் நன்னடத்தை இருக்க வேண்டும்,” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: