இரண்டு இலக்க எண்களை பெருக்க வேண்டும் என்றாலே, நமக்கெல்லாம் நேரம் எவ்வளவு எடுக்கும்? ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும் சிராக் ராதி என்ற சிறுவன் 4 இலக்க எண்ணாக இருந்தாலும், அசராமல் 2 நொடிகளில் அசால்ட்டாக பெருக்கி சரியான பதிலைக் கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான்.
உத்தரபிரதேச மாநிலம் சாஹரான்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் தான் சிராக் ராதி. ஜெய் சிங் பப்ளிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
4-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான், இச்சிறுவனுக்கு கணிதத்தில் அசாத்திய திறமை இருப்பது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் எளிதில் அவற்றை பெருக்கி விடைகளை கூறுகிறான் ராதி.
விஞ்ஞானியாக வேண்டும் என்பது இச்சிறுவனின் ஆசை. ஆனால், வீட்டில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால், அப்பள்ளி கட்டணம் வாங்காமலேயே தன் மகனை படிக்க வைப்பதாக, அவனது தந்தை கூறுகிறார்.
எப்பாடு பட்டாவது சிராக் ராதியை பெரிய விஞ்ஞானியாக்க வேண்டும் என்பதே அவனது பெற்றோரின், ஆசிரியர்களின் கணவாக உள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:A human calculator this 12 year old can solve sums of crores in seconds
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி