Advertisment

பி.பி.சி ஆவணப் பட சர்ச்சை; பா.ஜ.க-வில் அதிகாரபூர்வமாக சங்கமித்த ஏ.கே அந்தோணி மகன்

பி.பி.சி ஆவணப் பட சர்ச்சை ட்வீட் மூலம் காங்கிரஸிலிருந்து விலகி சில மாதங்களுக்குப் பிறகு ஏ கே ஆண்டனியின் மகன் அனில் பா.ஜ.க-வில் இணைந்தார்.

author-image
WebDesk
New Update
A K Antony’s son Anil joins BJP, months after quitting Cong over BBC docu tweet Tamil News

Former Kerala Chief Minister A K Antony’s son Anil K Antony addresses the media as he joins the BJP, in New Delhi on Thursday. (Photo: @BJP4India/Twitter)

A K Antony’s son Anil joins BJP Tamil News: 2002 குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஒரு நாள் கழித்து, கேரள முன்னாள் முதல்வர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் கே ஆண்டனி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி காலை கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியில் எனது எல்லா பொறுப்புகளில் இருந்தும் நான் ராஜினாமா செய்துள்ளேன். பேச்சுரிமைக்காக போராடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது டிவிட்டை நீக்கும்படி கூறி, சகித்து கொள்ள முடியாத அளவுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், அதற்கு நான் மறுத்து விட்டேன்” என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisment

கேரள காங்கிரசின் ஐ.டி. பிரிவு தலைவராக இருந்த அனில் அந்தோணி, தனது பதவி விலகல் கடிதம் ஒன்றையும் டுவிட்டரில் வெளியிட்டார். அதில், “பாஜகவுடன் பெரிய வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தியாவில் பிபிசி மற்றும் ஜாக் ஸ்ட்ரா (முன்னாள் இங்கிலாந்து வெளியுறவு செயலாளர்) ஆகியவற்றின் பார்வைகளை வைப்பதாக நான் நினைக்கிறேன். ஈராக் போரின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட அந்த நிறுவனம் இந்தியா மீது ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது. இது நமது இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸில் இருந்து விலகி சில மாதங்களுக்குப் பிறகு, அனில் கே. ஆண்டனி இன்று (வியாழக்கிழமை) பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

'நேற்றைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, கேபிசிசி டிஜிட்டல் மீடியாவின் ஒருங்கிணைப்பாளராகவும், ஏஐசிசி சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் காங்கிரஸில் எனது அனைத்துப் பொறுப்புகளையும் விட்டுவிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இங்கு நான் குறுகிய காலத்தில் பல்வேறு சமயங்களில் முழு மனதுடன், என்னை வழிநடத்திய எண்ணற்ற கட்சித் தொண்டர்கள், குறிப்பாக மாநிலத் தலைமை மற்றும் சசி தரூர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கட்சித் தலைமைக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Bjp India Kerala Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment