Advertisment

அன்று 'முண்டு மோடி விஜயன்'.. இன்று 'காங்., சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி'.. ஜெய்ராம் ரமேஷ்

பினராய் விஜயன் மோடி பாணியை பின்பற்றுகிறார் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருந்த நிலையில், தற்போது சீதாராம் யெச்சூரியை சிபிஎம் மற்றும் காங்கிரஸின் ஒருங்கிணைந்த பொதுச்செயலாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pinarayi mundu Modi

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், சீதாராம் யெச்சூரி

இரண்டு மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனை "முண்டு மோடி" என்றும், மாநிலத்தில் உள்ள சிபிஐ(எம்) கட்சியை பாஜகவின் "ஏ" அணி என்றும் அழைத்தார்.

அப்போது, தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Advertisment

இந்த நிலையில், சனிக்கிழமையன்று (நவ.12) ரமேஷ் CPI(M) உயர்மட்டத் தலைவர் சீதாராம் யெச்சூரியை CPI(M) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டின் பொதுச் செயலாளர் என்று அழைத்தார்.

ஜெய்ராம் ரமேஷ், சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா ஆகியோர் தேசிய மாநாட்டைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மேடைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பாஜக அரசை கடுமையாக சாடிய யெச்சூரி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அரசு திட்டம் போல எடுத்துள்ளதாக கூறினார்.

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ரா பற்றி ரமேஷ் பேசினார், அது கட்சியை பலப்படுத்துகிறது. காங்கிரஸ் ஒரு "இடதுசாரிக் கட்சி" அல்ல, ஆனால் அது "இடதுசாரிக் கட்சிகளுடன் உள்ளுணர்வு சார்ந்த உறவைக் கொண்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷ், “சீதாராம் யெச்சூரியை டூ இன் ஒன் பொதுச்செயலாளர் என்று அடிக்கடி குறிப்பிடுவதில் எந்த ரகசியமும் இல்லை. அவர் சிபிஎம் பொதுச் செயலாளராகவும், காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்” என்றார்.

மேலும், தோழர் ராஜாவைப் பற்றியும் இதையே கூறலாம்.

கேரளாவில் CPI(M) மற்றும் காங்கிரஸ் கசப்பான போட்டியாளர்களாக இருந்தாலும், இரு கட்சிகளும் மாநிலத்திற்கு வெளியே ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டுள்ளன:

2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான இடப் பகிர்வு உடன்படிக்கையைக் கொண்டிருந்தன, மேலும் அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாட்டின் கூட்டணிக் கட்சிகளாகும்.

விஜயனை "முண்டு மோடி" என்று அழைத்து, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று ரமேஷின் இந்தப் பேச்சுகள் வெளிவந்துள்ளன.

முன்னதாக, கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக கேரளாவில் 18 நாட்கள் தங்கியதற்காக ராகுல் காந்தியை சிபிஐ(எம்) விமர்சித்து இருந்தது.

மேலும், உத்தரபிரதேசத்தில் சில நாட்கள் மட்டுமே ராகுல் யாத்திரை செல்கிறது என்ற குற்றஞ்சாட்டையும் மார்க்சிஸ்ட் முன்வைத்தது.

இதையடுத்து ரமேஷ், தேசிய அளவில் காங்கிரஸைப் பற்றி அவர்களுக்கு ஒரு பார்வை இருக்கலாம. ஆனால் கேரளாவின் சூழலில், சிபிஎம் மற்றும் பாஜக ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என்றார்.

மேலும் விஜயன் குறித்து ரமேஷ், “சித்தாந்தத்தின் அடிப்படையில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் நிர்வாக பாணியில் கேரள முதல்வருக்கும் பிரதமருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

அவை ஒரே மாதிரியானவை… ஒரே மாதிரியான பாணி. கேரள முதல்வர் முண்டு மோடி. இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் கேட்கமாட்டார்கள், அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Congress Cpim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment