Advertisment

அகஸ்டா ஊழல்: கமல்நாத் மகன், உறவினர் தொடர்பு உருவானது எப்படி?

சிங்கப்பூர் வங்கியுடன் பிரிஸ்டைன் ரிவர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரிலேஷன்சிப் மேனேஜராக இருந்தார் என்று அமலாக்கத்துறையிடம் சக்சேனா அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
அகஸ்டா ஊழல்: கமல்நாத் மகன், உறவினர் தொடர்பு உருவானது எப்படி?

Ritu Sarin

Advertisment

Agusta Westland deal Key accused details how kickbacks were paid links to Kamal Naths nephew son : அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜீவ் சக்சேனா அமலாக்கத்துறையிடம் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வாறு லஞ்சப் பணம் கொண்டு வரப்பட்டது என்று விசாரணையின் போது கூறியுள்ளார். மேலும் இதில் எவ்வாறு டிஃபென்ஸ் டீலர் சுஷேன் மோஹன் குப்தா மற்றும் முன்னாள் மத்திய பிரதேச அமைச்சர் கமல்நாத் மருமகன் ரத்துல் பூரி ஆகியோர் சம்பந்தப்பட்டனர் என்றும் அவர் விளக்கினார்.

துபாயில் இருந்து 2019ம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் மீது, அப்ரூவர் ஆன பின்பும் முழுமையான தகவல்களை முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார் அவர்.  அவருடைய அறிக்கை 1000 பக்கங்களையும் கொண்டுள்ளது. அதில், ”இந்த ஊழலில் அவருடைய பங்கு எவ்வாறு கட்டமைப்பு மற்றும் அதற்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலோடு நிறுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார்.

ஆனால் இத்தாலி மற்றும் மொரீசியஸில் இருந்து பெறப்பட்ட லெட்டர்ஸ் ரோகட்டொரி தகவல்களில் சக்சேனாவின் நான்கு நிறுவனங்களுக்கு 0.94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இடைத்தரகர் க்றிஸ்டியன் மைக்கேலின் நிறுவனமான க்ளோபல் சர்வீஸில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. க்றிஸ்டியன் மைக்கேல் டிசம்பர் 2018ம் ஆண்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு தற்போது ஜெயிலில் உள்ளார். 2000ம் ஆண்டில் இண்டெர்ஸ்டெல்லர் நிறுவனத்தின் 99.9% பங்குகளையும் சக்சேனா வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறையினர் மொரிசீயஸில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து சக்சேனாவிடம் விசாரணை மேற்கொண்ட போது அவை மிகவும் “புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்ட மோசடி” என்று கூறினார். பின்பு இந்த முதலீட்டு ஒப்பந்தங்களில் தானும் ஒரு கூட்டாளி என்பதை ஒப்புக் கொண்டார் அவர். சூஷென் குப்தா குறித்து பேசிய போது சக்சேனா அமலாக்கத்துறையினரிடம், அவர் டி.எம். பவர் மற்ற்றும் டி.எம். சௌத் இந்தியா ஹாஸ்பிட்டாலிட்டி என்ற இரு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறியுள்ளார்.

To read this article in English

மேட்ரிக்ஸ் க்ரூப் லிமிட்டட் நிறுவனம் ரீகல் பவர் லிமிட்டட் கிளை நிறுவனத்தில் இருந்து ஆப்டிமா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனத்திற்கு முதலீடு செய்தது தொடர்பாக பேசிய போது, நான் இந்த நிதியானது நேரடியாகவோ மறைமுகமாகவோ இண்டெஸ்டெல்லர் டெக்னாலஜீஸ் அல்லது க்ளோபல் செர்வீஸ் எஃப். ஸி.சி.யில் இருந்து பெறப்பட்டதை உறுதியாக கூற முடியும் என்று கூறினார். இதில் குறிப்பிட்ட பகுதி நிதி ரதுல் பூரியால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது எனக்கு இது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வருகிறது என்று தெரியாது என்றார் அவர்.

குப்தா மற்றும் பூரியை உள்ளடக்கிய முதலீட்டு விவகாரங்கள் குறித்து சக்சேனா அக்டோபர் மாதம் 9ம் தேதி 2019ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது குறிப்பிட்டார். அவர்கள் மூவரும் மோஸர் பவர் திட்டங்களுக்கான சோலார் பேனல்களில் வர்த்தகம் செய்வது உட்பட “பல்வேறு வணிக முன்மொழிவுகள்” பற்றி விவாதித்தனர் என்றார். அவர்கள் மோசர் பவர் மற்றும் சப்ளையர்களுக்கு இடையில் "இடைத்தரகராக" செயல்பட வேண்டும். சக்சேனா அமலாக்கத்துறையினருக்கு ஒரு ஓட்ட விளக்கப்படத்தை வழங்கினார், தனது நிறுவனமான மிடாஸ் மெட்டல்ஸ் இன்ட் லிமிடெட் இடைத்தரகராக செயல்பட்டதைக் காட்டுகிறது.

சக்ஸேனா ஒப்புக்கொண்ட இரண்டாவது கூட்டு முயற்சி, பூரியின் நிறுவனமான ஆப்டிமா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தில் ஒரு முதலீட்டை "கட்டமைத்தல்" ஆகும், இது ஒரு நீர் மின் திட்டத்தில் முதலீடு செய்து வந்தது.

ஒரு சிறப்பு நோக்கத்திற்கான வாகக கட்டமைப்பை மொரீசியஸில் உருவாக்க அவர் முன்மொழிந்தார். நீர் மின்நிலையத்திற்கு முதலீடு செய்வதற்காக இருந்த ஆப்டிமா இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்திற்கு இது நிதி அனுப்ப ஏற்பாடு செய்தது. மொத்த முதலீடு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. நாங்கள் அதில் 5 மில்லியன் டாலர்களை வைக்க வேண்டும்.

பூரி 50 மில்லியன் டாலர் தொகைக்கு தனியார் பங்கு முதலீட்டை ஈர்க்க முற்படுவதாகக் குறிப்பிட்டார், அதற்காக அவர் முக்கிய சர்வதேச நிறுவனங்களுடன் கலந்துரையாடினார். மோசர் பவர் மற்றும் மிடாஸ் மெட்டல்களுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு இரண்டு முதல் ஆறு ஆண்டுகளில்சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்திருக்கும், ”என்று சக்சேனா அமலாக்கத்துறையிடம் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திற்கான எங்கள் கட்டணம் 1 மில்லியன் டாலர்கள் வரம்பில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார், ஆனால் பின்னர் மோஸர் பவர் முன்மொழியப்பட்ட முதலீடுகளைப் பெற தவறிவிட்டது, மேலும் சீனாவில் சப்ளையர்களுக்கான கொடுப்பனவுகள் இயல்புநிலைக்கு வந்துவிட்டன.

எங்களின் எந்த செயலாலும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்பதால் மிடாஸ் மெட்டல்ஸின் கட்டண பொறுப்புகளை முடிவு செய்ய, மோசர் பியர் நிறுவனம் நிதி இடைவெளியை குறைக்க ஒப்புக் கொண்டது. கொடுப்பனவுகள் மோசர் பவரின் நிதிக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டன,வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறுவீர்கள். ஆனால் அந்நிறுவனங்களின் கணக்கிலிருந்து அல்ல, அவை ஹவாலா ஆபரேட்டர்களிடமிருந்து வழங்கப்படும் என்று எங்களிடம் கூறினார்கள். இன்றுவரை, ரிகலில் முதலீடு செய்வதற்காக திருப்பி விடப்பட்ட நிதி காரணமாக, 21 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம், ”என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் : முக்கிய குற்றவாளி பட்டியலிட்ட பெயரில் கமல்நாத் மகன்!

பற்றாக்குறையை ஓரளவு ஈடுகட்ட, அக்டோபர் 2014 இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, இதன் மூலம் ரதுல் பூரியின் நிறுவனமான ஈக்வினாக்ஸ் ஓஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி சொத்துக்கள் மேட்ரிக்ஸ் குழுமத்திற்கு மாற்றப்பட்டது.

ஏதேனும் மிகப்பெரிய நிதியானது மோசர் பவர் மற்றும் ஆப்டிமா இன்ஃப்ராஸ்ட்ரெச்சர் நிறுவனங்களிடம் இருந்து உங்களின் நிறுவனத்திற்கு வந்ததா என்று அமலாக்கத்துறை எழுப்பிய கேள்வி குறித்து பேசிய போது, அவ்வபோது ப்ரிஸ்டைன் ரிவர் நிறுவனத்திடம் இருந்து நிதி வரும் என்று கூறினார். இந்த நிறுவனம் கமல் நாத்தின் மகன பகுல் நாத் நிர்வகித்து வருவதாக கூறினார் சக்சேனா.

தற்செயலாக, அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட ரதுல் பூரியின் 62 பக்க கணக்குகளில், 2014 ஆம் ஆண்டில் நான்கு சுற்று பணபரிவர்த்தனை உள்ளது. மொத்தம் 20 மில்லியன் டாலர்கள். அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட நிதின் பட்நகர் என்ற பெயருடன் பிரிஸ்டைன் ரிவருக்கு மாற்றப்பட்டது.

இந்த வருட ஆரம்பத்தில் அமலாக்கத்துறையினர் புதுடெல்லியில் பாட்நகரிடம் விசாரணை மேற்கொண்டது. ராகுல் பூரியில் 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டவர் இவர் என்று சக்சேனா அமலாக்கத்துறையினரிடம் விசாரணையின் போது கூறினார். சக்சேனாவை பொறுத்த வரையில் பாட்நகர் ஜே சஃப்ரா சராசின் வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். பின்பு சொந்தமாக ரியல் எஸ்டேட் பிஸினசை துவங்கினார் என்று கூறினார். சிங்கப்பூர் வங்கியுடன் பிரிஸ்டைன் ரிவர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரிலேஷன்சிப் மேனேஜராக இருந்தார் என்று அமலாக்கத்துறையிடம் சக்சேனா அறிவித்தார்.

சிங்கப்பூரின் நாணய ஆணையம் பிரிஸ்டைன் ரிவருக்கு பணம் செலுத்துவதற்கான நிதி ஆதாரம் குறித்து கேள்விகளை எழுப்பியதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்தார். ​​கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் ஆவணங்களை எதிர்கொள்ளும் வரை பிரிஸ்டைன் ரிவரின் பின்னால் ஒரு "தொண்டு அமைப்பு" இருப்பதாக சக்ஸேனா அறிந்திருக்கவில்லை.

நிதின் பட்நகரை தொடர்பு கொண்ட போது, கேட்கப்பட்ட கேள்விகளும், கோரப்பட்ட பதில்களும் நடந்து கொண்டிருக்கும் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். நான் விசாரணையில் முழுமையாக ஈடுபட்டு ஒத்துழைப்பினை வழங்கினேன். நான் பேங்க் ஆஃப் சிங்கப்பூரில் மட்டுமே மேலாளாராக பணியாற்றினேன். கடந்த 18 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறேன். எனக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கிற்கும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லை. என்னிடமிருந்து கோரப்பட்ட தகவல்கள் விசாரணை முகமைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன, மேலும் நடந்து கொண்டிருக்கும் விசாரணையின் ஊடக அறிக்கைகள் நீதி நிர்வாகத்தில் தலையிடுவதை தெளிவாகக் குறிக்கும் என்பதால் ஊடகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளேன்”

ரதுல்பூரி தன்னுடைய வழக்கறிஞர் நவீன் கப்பிலா மூலம், நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள் ராஜீவ் சக்சேனாவிற்கு அனுப்பியது என்று கூறுகின்றேன். ஆரம்பத்தில் அவர் அப்ரூவராக மாறினாலும், அமலாக்கத்துறை எல்.டி. சிறப்பு நீதிபதி முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்து அப்ரூவர்ஷிப்பை ரத்து செய்ய கூறியுள்ளது. அமலாக்கத்துறை சக்சேனாவை நம்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இத்தகைய சூழலில் எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் அவரை நம்பியிருப்பதன் மூலமோ அல்லது அது புகாரளிக்கப்படுவதாக சித்தரிக்கப்பட்ட சூழலிலோ சமன் செய்வது, தவறாகப் புகாரளித்தல் மற்றும் பொய்யைப் பரப்புதல் போன்றவையாகும் என்று பதில் அளித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment