/indian-express-tamil/media/media_files/fo2zcY7uY6KR057GkpgC.jpg)
முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியின் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.22) நடைபெற்றது.
தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேசும்போது, “புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரசில் சந்திரபிரியங்கா என்ற அமைச்சரின் செயல்பாடு சரியில்லை என்று முதலமைச்சர், அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்தப் பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு உடனடி அனுமதி தரவில்லை என்பதற்காக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என நாராயணசாமி பேசுகிறார்.
தற்போது அந்த அமைச்சரின் பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே நாராயணசாமி முழு நேர அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வாரா?
பாஜக துணையுடன் புதுச்சேரியில் நடைபெறும் ஆட்சியில் எந்தவொரு நீண்டகால பயனளிக்கும் திட்டமும் செயல்படுத்தவில்லை.
முதலமைச்சருக்கு பாஜக தலைமையால் முடிந்த அளவுக்கு தொல்லையை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இதை முதலமைச்சர் தான் உணர வேண்டும் என்று கூறிய அன்பழகன் பாஜகவின் வேலையே தனது கூட்டணியில் உள்ளவர்களை முதலில் காலி செய்வது தான் என்று குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.