/indian-express-tamil/media/media_files/egeazPYGnfuImAci2lVH.jpg)
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்.
Puducherry AIADMK: ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது; மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் அதிமுக ஈடுபடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழகத்தை போல் புதுச்சேரி மாநிலத்தில் உயிரழப்பு ஏற்படுவதற்கு முன்பு, ஷவர்மா உள்ளிட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை தடை செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்புகளை உணர்ந்து உணவகங்களை ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட கலவைகள் கொண்டு உணவு தயாரிக்கும் கடை உரிமையாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
ரூ.360 கோடி மதிப்பில் ப்ரீபெய்ட் மில் மீட்டர் திட்டத்திற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளது, மக்களின் வரி பணத்தை வீணடிக்க கூடிய, ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.
இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை திரும்ப பெறவிட்டால் தலைமையின் அனுமதியை பெற்று அதிமுக தொடர் போராட்டத்தில் ஈடுபடும்” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.