/tamil-ie/media/media_files/uploads/2023/01/air-india-2-2.jpeg)
ஏர் இந்தியா நிறுவனம், அதன் மதுபானம் தொடர்பான கொள்கையை மாற்றி அமைத்து உள்ளது.
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் சென்றார். இவர் அதிகமாக குடித்திருந்ததால் சக பயணிகள் மீது சிறுநீர் கழித்தார்.
இந்நிலையில் இவர் கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் 4 மாதங்கள் ஏர்.இந்தியா விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது.
இதுபோல கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி பயணித்த ஆண் பயணி, அருகில் இருந்து பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்தார்.
தொடர்ந்து இதுபோல சம்பவம் நிகழ்வதால், மதுபானம் தொடர்பான தனது கொள்கை மாற்றிகொள்ள உள்ளதாக ஏர். இந்திய நிறுவனம் முடிவு செய்துள்ளது. என்.ஆர். ஏ பயணிகளுக்கு பயணத்தின்போது, மதுபானம் வழங்கும் போக்கு அனைத்து விமானத்திலும் இருக்கிறது .
இந்நிலையில் குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்றும் அதற்கு அதிகமாக பயணிகள் வேண்டும் என்று கேட்டால் அதை விமான ஊழியர்கள் மறுக்கலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us