ஓய்வு பெற இருந்த விமானி; மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்த உதவியாளர்: விமான விபத்தில் பலியான உயிர்கள்!

அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த மூத்த ஊழியர்களில் 60 வயதான கேப்டன் சுமித் சபர்வால் ஆவார்.

அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த மூத்த ஊழியர்களில் 60 வயதான கேப்டன் சுமித் சபர்வால் ஆவார்.

author-image
WebDesk
New Update

விமானத்தை வழிநடத்தி வந்த கேப்டன் சம்மேட் சபர்வாலின் சகோதரி, வியாழக்கிழமை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில். Photograph: (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: சங்கதீப் பானர்ஜி)

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது, இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 12 விமானக் குழு உறுப்பினர்கள் உட்பட பல உயிர்கள் பலியாகின. இதில் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருந்த மூத்த விமானி முதல், தங்கள் கிராமப் பெண்களுக்கு உத்வேகமாகத் திகழ்ந்த இளம் பணிப்பெண்கள் வரை, இந்த சோகம் பல குடும்பங்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

விமானி சுமித் சபர்வால்: சில மாதங்களில் ஓய்வு பெற இருந்த மூத்த விமானி

விமானி சுமித் சபர்வால் (60),விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் மூத்த விமானி. அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. மும்பை போவாயில் உள்ள ஜல்வாயு விஹாரில் தனது 90 வயது தந்தையுடன் வசித்து வந்த சபர்வால், இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருந்தார். தனது முதுமைப் பருவத்தில் தந்தையுடன் அதிக நேரம் செலவிடத் திட்டமிட்டிருந்தார். "அவர் மிகவும் ஒழுக்கமானவர். சீருடையில் அடிக்கடி வருவதையும் போவதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம், ஆனால் அவர் மிகவும் ஒதுங்கிய நபர்" என்று ஜல்வாயு விஹாரைச் சேர்ந்த அவரின் பக்கத்து வீட்டார்கள் கூறியுள்ளனர்.

Advertisment
Advertisements

சபர்வால் தனது மூத்த சகோதரியை விட்டுச் சென்றுள்ளார், அவர் டெல்லியில் வசிக்கிறார். அவரது இரண்டு மகன்களும் இதே தொழிலில் ஈடுபட்டு வணிக விமானிகளாக உள்ளனர். அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக அவர் வாழ்ந்த போவாய் குடியிருப்பாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, விமானி சபர்வால், லண்டன் நோக்கிச் சென்ற ட்ரீம்லைனரை தனது முதல் அதிகாரி கிளைவ் குண்டாருடன் இணைந்து இயக்கினார். ஆரம்பகட்ட விசாரணையின்படி, நீண்ட தூர பயணத்திற்கான எரிபொருளால் விமானம் அதிக சுமையுடன் இருந்தது, இது விமான வெடிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு விசாரணை நடத்தப்படுவதாகக் கூறியுள்ளது.

தீபக் பதக்: அர்ப்பணிப்புள்ள விமானப் பணிப்பெண்

பதலாபூர் பகுதியைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் தீபக் பதக், விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் விமானத்தில் இருந்த குழு உறுப்பினர்களில் ஒருவர். 11 ஆண்டுகளுக்கும் மேலாக விமான நிறுவனத்தில் அர்ப்பணிப்புள்ள ஊழியராக இருந்த தீபக், எந்த ஒரு விமான பயணத்திற்கும் முன்பு வீட்டிற்கு அழைத்து பேசுவதை தவறாமல் தனது வழக்கமாக பின்பற்றினார், வியாழக்கிழமையும் அவர் அதையே செய்தார். "எப்பொழுதும் போல, அவர் புறப்படுவதற்கு சற்று முன்பு எங்களை அழைத்தார். அதுவே கடைசியாக இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை," என்று ஒரு குடும்ப உறுப்பினர் கூறினார்.

publive-image
தீபக் பதக்

 விபத்துக்குப் பிறகு ஆரம்ப நிமிடங்களில் குடும்பத்திற்கு நம்பிக்கைகள் இருந்தன. "அவரது தொலைபேசி இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அவர் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்," என்று அவர்கள் கூறினர், அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரை எந்தவித ஊகமும் செய்யவில்லை. தீபக்கின் உறவினர்கள் அவரை கடமை தவறாத மற்றும் ஒழுக்கமானவர். தனது வேலையில் அர்ப்பணிப்புடன் உழைத்தார் மற்றும் தொடர்பை ஒருபோதும் துண்டிக்கவில்லை. இந்த துயரம் பதக் குடும்பத்திற்கும், அவரை மென்மையான மற்றும் நம்பிக்கையான நபராக அறிந்திருந்த பதலாபூர் சமூகத்திற்கும் பெரும் துயரைக் கொண்டு வந்துள்ளது.

சைனீதா சக்ரவர்த்தி: புதிய கனவுகளுடன் பறந்தவர்

சைனீதா சக்ரவர்த்தி(35), அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களால் அன்புடன் 'பிங்கி' என்று அழைக்கப்பட்டவர், ஏர் இந்தியா ட்ரீம்லைனரில் இருந்த பத்து கேபின் குழுவினரில் ஒருவர். கோ ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு சமீபத்தில் ஏர் இந்தியாவில் சேர்ந்த ஜுஹு கோலிவாடா குடியிருப்பாளர் சக்ரவர்த்தி.

publive-image
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. Photograph: ((எக்ஸ்பிரஸ் புகைப்படம்: பூபேந்திர ராணா))

 அவரின் சிறுவயது நண்பர் நிக்கி டி'சௌசா கூறுகையில், "நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம். அவர் மானேக்ஜி கூப்பர் பள்ளியிலும் பின்னர் மிதிபாய் கல்லூரியிலும் படித்தார். அவர் இடம் மாறிய பிறகும், அவரது சீருடையில் நான் அவரைக் கண்டிருக்கிறேன்." பல ஆண்டுகளாக அவர்கள் பிரிந்திருந்தாலும், சைனீதா தான் அறிந்த அனைத்திலும் எப்போதும் அர்ப்பணிப்புடனும் தொழில் ரீதியாகவும் இருந்தார் என்று நிக்கி கூறினார். "அவர் இருந்த இடத்திற்கு வர கடுமையாக உழைத்தார். இது மனதை உடைக்கும் சம்பவம்" என்று அவர் மேலும் கூறினார்.

மைதிலி மோரேஸ்வர் பாட்டீல்: கிராமத்துப் பெண்களுக்கு உத்வேகம்

பண்வேலில் உள்ள நாவா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது விமானப் பணிப்பெண் மைதிலி மோரேஸ்வர் பாட்டீல், வியாழக்கிழமை மதியம் அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களில் ஒருவர். இந்த துயரம் குறித்த செய்திகள் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்தவுடன், கிராம மக்கள் மைதிலியின் வீட்டில் கூடினர். அவர் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த போதிலும், விமானப் போக்குவரத்துத் துறையில் தனது கனவுகளைத் தொடர அவர் மேற்கொண்ட கடின உழைப்பை பெரும்பாலானோர் நினைவு கூர்ந்தனர்.

publive-image

12-ம்ஆம் வகுப்பு வரை டிஎஸ் ரஹ்மான் வித்யாலயாவில் படித்த அவர், நிதிச் சிக்கல்கள் இருந்தபோதிலும் தனது குடும்பத்தின் முழு ஆதரவுடன் விமானப் போக்குவரத்துப் படிப்பில் சேர்ந்தார். அவர் ஏர் இந்தியாவில் வேலை பெற்று, நாவா கிராமத்திலும் அதற்கு அப்பாலும் எண்ணற்ற இளம் பெண்களுக்கு உத்வேகமாகத் திகழ்ந்தார் என்று அவர்கள் கூறினர். "அவள் எங்கள் பெருமை. அவளது சாதனைகள் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தன. விபத்து செய்தி எங்களை அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது" என்று நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவர் மைதிலியைப் பற்றி ஒரு அண்டை வீட்டார் கூறினார். "நேற்று மதியம் அவள் வேலைக்குச் சென்றாள். அதன்பிறகு விபத்துக்குள்ளான விமானத்தில் அவர் இருக்கிறார் என்று தெரிவிக்கப்படடது. நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்," என்று ஒரு உறவினர் கூறினார்.

publive-image
இந்தியாவின் வடமேற்கு நகரமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளைச் சுற்றி மக்கள் நிற்கிறார்கள். Photograph: ( (எக்ஸ்பிரஸ் புகைப்படம்))

 ரோஷ்னி ராஜேந்திர சோன்கரே: கனவுகளைத் துரத்திய இளம்பெண்

ரோஷ்னி ராஜேந்திர சோன்கரே(27), அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த குழு உறுப்பினர்களில் ஒருவர். டோம்பிவிலியில் உள்ள ராஜாஜி பாதையில் உள்ள மாதபி பங்களா பகுதியைச் சேர்ந்தவர். செய்தி கிடைத்ததும், சோன்கரேவின் பெற்றோரும் சகோதரரும் மும்பை விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
சமீபத்தில் ஏர் இந்தியாவில் சேர்ந்த சோன்கரே, விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தார் என்று ஒரு உறவினர் கூறினார், மேலும் ஒரு விமானப் பணிப்பெண்ணாக ஆவது தனது "கனவு" என்றும் கூறினார். அவர் தனது பெற்றோருடனும் சகோதரருடனும் டோம்பிவிலி கிழக்கில் உள்ள நியூ உமியா க்ருபா சொசைட்டியில் வசித்து வந்தார். அவரது உறவினர்கள் அவரை "பிரகாசமான மற்றும் புத்திசாலித்தனமான" இளம் பெண் என்று வர்ணித்தனர், அவர் தனது படிப்பை முடித்தவுடன் தான் விரும்பியதை அடைந்தார். அவரது சுற்றுப்புறத்தில், அவரது ஏர் இந்தியா சீருடை பெருமைக்குரிய விஷயமாக இருந்தது.

publive-image
ரோஷ்ணி ராஜேந்திர சோங்காரே

 அவருக்கு இன்ஸ்டாகிராமில் கணிசமான பின்தொடர்பவர்கள், 54,000 பேர் இருந்தனர், மேலும் தனது வாழ்க்கையின் குறிப்புகளை அவர் இன்ஸ்டாவில்  தொடர்ந்து வெளியிட்டார். ரோஷ்னி ஏர் இந்தியா விமானத்தில் பணியில் இருந்தார் என்பது தெளிவாகியவுடன், டோம்பிவிலி எம்.எல்.ஏ மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் மாநில அரசின் அவசரகால விமான விபத்துத் துறையைத் தொடர்பு கொண்டு தகவல் பெற்று குடும்பத்திற்கு உதவினார். இந்த துயர நிகழ்வு, விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் பலரின் தியாகங்களையும், அவர்களின் குடும்பங்களின் இழப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது. 

Air India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: