ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது அமலாக்கத் துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த குற்றப் பத்திரிக்கையில் ப. சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட 9 நபர்களின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை ஏற்பது குறித்த விசாரணை நவம்பர் 26ம் தேதி அன்று நடைபெறும் என டெல்லி நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை
கடந்த 2006ம் ஆண்டு தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக செயல்பட்டவர் ப.சிதம்பரம். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.350 கோடி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக முறைகேடாக அனுமதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் என இருவர் மீதும் தனித்தனியாக மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது. ஏற்கனவே சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்திக் சிதம்பரம் உட்பட 16 பேர் மீது பாட்டியாலா நீதி மன்றத்தில் சிபிஐ இதற்கு முன்னதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
ஆனால் இவ்வழக்குகள் தொடர்பாக சிபிஐயோ, அமலாக்கத்துறையினரோ தன்னை கைது செய்ய இயலாத வகையில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் மறுத்து உத்தரவிட்ட முக்தா குப்தா அமர்வு, நவம்பர் 25 வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க