Pakistan under biggest pressure from FATF: பாரிஸில் நடைபெற்று வரும் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்.ஏ.டி.எஃப்) கூட்டத்தில் பாகிஸ்தான் அந்நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திங்கள் கிழமை தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புப் படைகளின் (ஏ.டி.எஸ்) தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய தோவல், பாக்கிஸ்தானுக்கு மிகப்பெரிய அழுத்தம் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்.ஏ.டி.எஃப்) செயல்பாட்டாளர்களிடமிருந்து வருகிறது என்றார்.
தற்போதைய சூழலில் நிதி மற்றும் மனித செலவுகள் மிகப் பெரியவை என்பதால் எந்தவொரு நாடும் போருக்குச் செல்ல முடியாது. வெற்றி குறித்து யாரும் உறுதியாக சொல்லமுடியாது என்றார்.
“பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரச கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.
பயங்கரவாதம் என்பது எதிரிகளை மலிவான விலைகொண்ட நிலையான விரும்பமாகும். அது பெருமளவில் எதிரியை சேதப்படுத்தும்” என்று அஜித் தோவல் பாகிஸ்தானைப் பற்றிய குறிப்பில் கூறினார்.
நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்.ஏ.டி.எஃப்) என்பது 1989 ஆம் ஆண்டில் பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சர்வதேச நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கான பிற அச்சுறுத்தல்களை எதிர்த்து நிறுவப்பட்ட பல நாட்டு அரசுகளின் அமைப்பு ஆகும்.