மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார். ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சிறிது நேரத்திலேயே அவர் ராஜ்பவனை அடைந்தார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் ராஜ் பவனுக்கு வந்தார். கட்சியின் மாநிலத் தலைவர் பதவி மறுக்கப்பட்டதில் அஜித் பவார் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் பரவின.
Advertisment
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்த அவர், அமைப்புப் பொறுப்பை கோரினார். எனினும் அவருக்கு கிடைக்கவில்லை.
மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றார் அஜித் பவார்.
இந்த நிலையில், ஷிண்டே-ஃபட்னாவிஸ் அரசில் தானும் எட்டு எம்எல்ஏக்களும் என்சிபியாக இணைந்துள்ளதாகவும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தில் தொடர்ந்து போராடுவோம் என்றும் என்சிபி தலைவர் அஜித் பவார் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
இதற்கிடையில், மும்பை-நாக்பூர் விரைவுச் சாலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்தப் பேருந்து விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விரைவுச் சாலையில் விபத்துக்கான காரணங்களை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“