Advertisment

'ராகுலின் யாத்திரைக்கு அழைப்பு இல்லை': அகிலேஷ் குற்றச்சாட்டை மறுக்கும் காங்.,

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்க முடியாது என்று நேற்று புதன்கிழமை சுட்டிக்காட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Akhilesh Rahul Gandhi Yatra Congress denies claim Tamil News

ராகுல் காந்தி, பிப்ரவரி 14-ம் தேதி கிழக்கில் உள்ள சந்தோலியில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Akhilesh Yadav | Rahul Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான 2வது யாத்திரையை  ராகுல் நடத்தி வருகிறார். 

Advertisment

மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த 2வது பாத யாத்திரையை ராகுல் காந்தி கடந்த 15ம் தேதி அன்று மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் உள்ள கோங்ஜோமில் இருந்து தொடங்கினார். இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும் என்றும் 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.  அவர் மார்ச் 20-21 அன்று மும்பையை அடைவார். 

அழைப்பு இல்லை 

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இடையே இரு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதன் மற்றொரு அறிகுறியாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்க முடியாது என்று நேற்று புதன்கிழமை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், "காங்கிரஸும் பா.ஜ.க-வும்  அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்க வேண்டாம்" என்றும். அவர் கூறினார்.

பிப்ரவரி 14-ம் தேதி கிழக்கில் உள்ள சந்தோலியில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழையும் ராகுல் காந்தி, அம்மாநிலத்தில் 10 நாட்கள் யாத்திரையை மேற்கொள்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வீர்களா? என்று லக்னோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் கேட்டதற்கு, “பா.ஜ.க அவர்களின் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்கவில்லை. அதேபோல், காங்கிரசும் எங்களை அழைக்கவில்லை. சமாஜ்வாதிகள் தனியாக சண்டை செய்ய உள்ளோம். கூட்டணியை (இந்தியா) வலுப்படுத்தும் நோக்கில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். பா.ஜ.,வை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்." என்று அவர் கூறினார். 

மறுப்பு 

அகிலேஷ் யாதவ் கூறியது தொடர்பாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட பேசிய போது, யாத்திரைக்கான அழைப்பிதழ்கள் அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் சென்றுள்ளதாக கூறினார். “அழைப்புகளை ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அனுப்பியுள்ளனர். என்னிடமும் அதற்கான நகல் உள்ளது. மற்ற இந்தியா கூட்டணி தலைவர்களுடன் அகிலேஷ் யாதவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது,” என்றார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவர், ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது செய்ததைப் போல, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு வர வாய்ப்புள்ளதாகக் கூறினார். இருப்பினும், அந்த முறையும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆ.ர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் அகிலேஷ் ஆகியோர் மேற்கு உ.பி.யில் சில மாவட்டங்களை உள்ளடக்கிய யாத்திரையில் இருந்து விலகினர். எனினும், யாத்திரையில் பங்கேற்க சில தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 14-ம் தேதி சந்தோலியில் இருந்து உ.பி.யில் நுழைந்த பிறகு, ராஜஸ்தானுக்குச் செல்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி, ராகுலின் முன்னாள் தொகுதியான அமேதி, மாநிலத் தலைநகர் லக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் பிற மாவட்டங்கள் உட்பட குறைந்தது 15 மாவட்டங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது நடந்தவுடன், கடந்த முறை செய்தது போல் இந்திய கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்புவோம். அகிலேஷ்ஜி கலந்து கொள்வாரா இல்லையா என்பது அவரைப் பொறுத்தே உள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க காங்கிரஸ் மற்றும் எஸ்பி கட்சிகள் புதன்கிழமை மாலை டெல்லியில் கூட்டத்தை நடத்தியதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சமாஜவாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ், “பாதி தூரத்தை நாங்கள் கடந்துவிட்டோம், மீதியை நாங்கள் கடப்போம்” என்றார். பி.எஸ்.பி கூட்டணியில் சேருமா என்ற கேள்விக்கு அவர், "பிஎஸ்பி சேருமா என்று நீங்கள் கேட்க வேண்டும். நாங்கள் காங்கிரஸுடன் பேச வந்துள்ளோம், எங்களுடன் பேச காங்கிரஸ் உள்ளது." என்று அவர் கூறினார். 

மாயாவதி தலைமையிலான கட்சி இந்தியா கூட்டணிக்குள் வர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், உ.பி.யில் தன்னை ஆதிக்க எதிர்ப்பு சக்தியாகக் கருதும் எஸ்.பி., இதை எதிர்ப்பதாக நம்பப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவேன் என மாயாவதி மீண்டும் கூறியிருந்தார். 

புதன்கிழமை, டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரின் சித்தாந்தங்களை மக்களிடம் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட கட்சியின் ‘சம்விதன் பச்சாவ், தேஷ் பச்சாவோ சமாஜ்வாடி பிடிஏ (பிச்டே, தலித், ஆதிவாசி) யாத்ராவையும் அகிலேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன்பின்னர் அகிலேஷ் கூறுகையில், “சமாஜ்வாதிகளின் போராட்டம் விவசாயிகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் ஆகியோருக்கு மரியாதையை உறுதி செய்வதாகும். இளைஞர்கள் தங்களுடைய சி.வி-களுடன் வேலைதேடி அலைகிறார்கள். மக்கள் வேலை தருவதாக உறுதியளித்தனர் மற்றும் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை நடத்தினர்.  நிகழ்வுகளை நாம் மறக்க முடியுமா? கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் வந்தனர். ‘மேக் இன் இந்தியா’, ‘மேக் இன் உ.பி.’ என்று வாக்குறுதி அளித்தனர். 40 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக சட்டசபையில் அரசு தெரிவித்தது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு என்ன நடந்தது? அந்த முதலீடு எங்கே? தரவு எங்கே?” மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளும் மோசமான நிலையில் உள்ளன." என்று அவர் கூறினார். 

சபாநாயகர் பொறுப்பை ஏற்று, சட்டசபையை முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “அரசாங்கம் அதை யாரும் கேள்வி எழுப்புவதையும், குரல் எழுப்புவதையும் விரும்பவில்லை. பெரும்பாலும், எதிர்க்கட்சிகள் நேரடியான கேள்விகளைக் கேட்டாலும் அவற்றிற்குப் பதில் இல்லை, ”என்றும், மாநிலத்தில் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுகளின் ஆட்சேர்ப்பு மற்றும் தெரு கால்நடைகள் பற்றிய தரவு போன்ற உதாரணங்களையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Akhilesh hints won’t join Rahul Gandhi’s Yatra, Congress denies claim that invites not sent

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Akhilesh Yadav Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment