Advertisment

காங்கிரஸை தாக்கும் அகிலேஷ்; விமர்சிக்கும் மம்தா; இந்தியா கூட்டணியில் சலசலப்பு

ஈகோ முடிவுக்கு வந்துவிட்டதாக விமர்சிக்கும் அகிலேஷ் யாதவ்; கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி; தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தியா கூட்டணியில் நீடிக்கும் குழப்பம்

author-image
WebDesk
New Update
mamata and akilesh

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். (எக்ஸ்பிரஸ் கோப்பு புகைப்படம் - விஷால் ஸ்ரீவஸ்தவா)

Manoj C G

Advertisment

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஹிந்தி இதயப் பகுதி மாநிலங்களில் காங்கிரஸின் பெரும் தோல்விக்குப் பிறகு, அக்கட்சி மற்றொரு சிக்கலை எதிர்கொள்கிறது, கூட்டணியின் அங்கத்தவர்களிடமிருந்து இந்தியா கூட்டணியில் அதன் முக்கியத்துவத்திற்கு ஒரு சவால்.

ஆங்கிலத்தில் படிக்க: Akhilesh’s dig at Congress, Mamata’s criticism: INDIA alliance turbulence continues after poll results

சமாஜ்வாடி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் திங்களன்று காங்கிரஸுக்கு வலுவான செய்திகளை அனுப்பியுள்ளனர், மம்தா பானர்ஜி டிசம்பர் 6 அன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவால் அழைக்கப்பட்ட கூட்டணியின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமையை வெளிப்படுத்தினார்.

வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அகிலேஷ், காங்கிரசை குறிப்பிடாமல், ”இப்போது முடிவுகள் வெளியாகிவிட்டதால், ஈகோவும் முடிவுக்கு வந்துவிட்டது. வரும் நாட்களில், ஒரு புதிய வழி கண்டுபிடிக்கப்படும்என்று கூறினார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவது முக்கியம் என்றாலும், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதிகளின் போராட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம் என்று அகிலேஷ் யாதவ் கூறினார். உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் போராட்டம் பெரியது, கட்சி சில பெரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பேச்சு வார்த்தைகள் எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கே இருந்து தொடங்கும். எந்தக் கட்சி வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும்என்று அகிலேஷ் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜியும் விமர்சனங்களை முன்வைத்தார். மேற்கு வங்க சட்டசபையில், இந்தி இதயப் பகுதியான மாநிலங்களை காங்கிரஸ் இழந்தது, ஏனெனில், தொகுதிப் பங்கீடு ஏற்பாடு இருந்திருந்தால், வாக்குப் பிரிவினையைத் தவிர்த்திருக்கலாம் என்று மம்தா பானர்ஜி கூறினார். ”தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் வெற்றி பெற்றிருப்பார்கள். இந்தியா கூட்டணிக் கட்சிகள் சில வாக்குகளைக் குறைத்தன, இதுவே உண்மை. தொகுதி பகிர்வு ஏற்பாட்டை பரிந்துரைத்தோம். வாக்குகள் பிரிந்ததால் அவர்கள் தோற்றனர்,'' என்று மம்தா கூறினார்.

பின்னர், டிசம்பர் 6 கூட்டத்தைப் பற்றி கூறுகையில், “டிசம்பர் 6 முதல் டிசம்பர் 11 வரை நான் வடக்கு வங்காளத்திற்குச் செல்கிறேன். டிசம்பர் 6 சந்திப்பு தேதி பற்றி எனக்குத் தெரியாது. சந்திப்பு தேதி பற்றி முன்பே தெரிந்திருந்தால், நான் எனது பயணத்தை மீண்டும் திட்டமிட்டிருக்கலாம்," என்று மம்தா கூறினார்.

இதற்கிடையில், டெல்லியில்

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே கூட்டிய இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை சமாஜ்வாதி கட்சி திங்கள்கிழமை காலை புறக்கணித்தது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணியை மறுத்ததற்காக அக்கட்சி அதிருப்தி அடைந்துள்ளது, மேலும் கட்சி நடத்தப்பட்ட விதம் குறித்தும், குறிப்பாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களால் மிகவும் அதிருப்தியில் உள்ளது.

மல்லிகார்ஜூன் கார்கேவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தாமதம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் இந்த விவகாரம் குறித்து பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் குறித்து கேள்வி அவர் எழுப்பினார். பெரும்பாலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸுடன் அதிருப்தியில் உள்ளன, ஏனெனில் சட்டமன்றத் தேர்தலின் காரணமாக கூட்டணியின் செயல்பாடுகளை காங்கிரஸ் முடக்கியது.

மம்தாவைத் தவிர, தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினும் டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லி செல்லமாட்டார், ஏனெனில் மிக்ஜாம் புயலை அடுத்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அவரது அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டத்தை ஒத்திவைக்குமாறு காங்கிரஸிடம் சில கட்சித் தலைவர்கள் முறைசாரா வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மனநிலையை உணர்ந்த காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.

மல்லிகார்ஜுன் கார்கே இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், இது 27 அல்லது 28 கூட்டணி கட்சிகளின் முறைசாரா கூட்டம், டிசம்பர் 6 அன்று நடைபெறும்; அதன்பிறகு முறையான கூட்டம் விரைவில் நடத்தப்படும்என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த கூட்டணி

எனினும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒருமித்த வியூகத்தை கடைப்பிடிக்க முடிவு செய்தன. எதிர்க்கட்சிகள் சபை நடவடிக்கைகளை சீர்குலைக்காது, ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா ஆகியவற்றை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட மூன்று மசோதாக்கள் உட்பட சில மசோதாக்களை எதிர்க்கும். நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் வைக்கும்.

சபை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை வெளியேற்ற பரிந்துரைக்கும் நெறிமுறைக் குழு அறிக்கையை மக்களவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன.

இதற்கிடையில், காங்கிரஸின் நாடாளுமன்ற வியூகக் குழு மாலையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கூடியது. நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதாகக் கூறிய காங்கிரஸ், ஆனால் ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றும் மசோதாக்களை எதிர்ப்பதாகக் கூறியது.

இவை ஆபத்தான சட்டங்கள்... நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை நிலைக்குழுவிலும் தெரிவித்திருந்தோம். ஆனால் நிலைக்குழு மூலம் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளனஎன்று கூட்டத்திற்குப் பிறகு ஜெய்ராம் ரமேஷ் கூறினார். மேலும், பொருளாதார நிலை, வெளியுறவுக் கொள்கை சவால்கள், எல்லைப் பதற்றம், மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்தும் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுக்கும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

கூடுதல் தகவல்கள் - ENS லக்னோ

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mamata Banerjee India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment