scorecardresearch

இடஒதுக்கீடு சமூகத்தை உயர்த்தாது; தாழ்த்தும்… கோட்டாவில் இருந்து வெளியேற விரும்பும் சைனிகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள சைனிகள் தங்களை சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் பிரிவில் சேர்ப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் தங்களை ராஜபுத்திரர்கள், நிலப்பிரபுக்கள், தொழிலதிபர்கள் என்று கூறுகிறார்கள்.

Pritam Singh Saini, jammu and kashmir, reservation, quota, பிரிதம் சிங் சைனி, ஜம்மு காஷ்மீர் சைனிகள், கோட்டாவில் இருந்து வெளியேற விரும்பும் சைனிகள், jobs quota, india news, todays news, Pritam Singh Saini news, all india j&k saini

ஜம்மு காஷ்மீரில் உள்ள சைனிகள் தங்களை சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் பிரிவில் சேர்ப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அவர்கள் ராஜபுத்திரர்கள், நிலப்பிரபுக்கள், தொழிலதிபர்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் இப்போது மோசமான ஒன்றின் மூலம் மற்ற உயர் சாதியினருடன் சண்டையிடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

இடஒதுக்கீடு கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அனைத்து ஜம்மு காஷ்மீர் சைனி சபா அமைப்பின் தலைவர் பிரீதம் சிங் சைனியும், சாதி மற்றும் சமூகப் பிரிவைச் சேர்ந்த குழுக்களால், ஜம்மு காஷ்மீர் சைனிகள் தனித்து நிற்கின்றனர். 4% ஒதுக்கீட்டை பெறும் சைனிகள் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் (SEBCs)பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சுமார் 70,000 பேர் மக்கள்தொகை கொண்ட சைனி சமூகம், யூனியன் பிரதேசத்தில் அரசு வேலைகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளித்ததைத் தொடர்ந்து போராட சாலையில் இறங்கியுள்ளனர்.

அனைத்து ஜம்மு காஷ்மீர் சைனி சபா அமைப்பின் தலைவர் பிரீதம் சிங் சைனி, சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் சைனிகளுக்கான இடஒதுக்கீடு அந்தஸ்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவர் சைனி சமூகம் ஏன் ஒதுக்கீட்டை விரும்பவில்லை என்பதை விளக்குகிறார்.

கேள்வி: இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? அரசு வேலைகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சைனி சமூகத்திற்கு இது ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தாதா?

சைனி: இதில் எந்த நன்மையும் இல்லை. மாறாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள மொத்தம் 42 பேர் கொண்ட எஸ்.இ.பி.சி-களுடன் எங்களை இணைக்கும் அரசாங்க முடிவு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உட்பட ஒவ்வொரு தளத்திலும் மற்ற உயர் சாதியினருடன் போட்டியிடும் அளவுக்குத் தகுதியுள்ள எங்கள் சமூகத்தின் மன உறுதியை, குறிப்பாக இளைஞர்களின் மன உறுதியைக் குறைத்துள்ளது.

கே: ஒதுக்கீட்டுப் பலன்களை நிராகரிக்கும் சில சமூகங்கள் இருப்பதால், உங்களை ஒரு வகையில் தனித்துவமாகப் பார்க்கிறீர்களா?

சைனி: எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், அரசாங்கம் எங்கள் சமூகத்தை ‘மற்ற சமூக சாதிகள்’ பட்டியலில் கொண்டு வருகிறது. இருப்பினும், நாங்கள் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் அல்ல. எங்கள் இளைஞர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து உயர் சாதியினரிடையே உள்ள சிறந்த படித்தவர்களுடன் போட்டி போடுவதற்காக தயார் ஆகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள கிட்டத்தட்ட 42 எஸ்.இ.பி.சி-களுக்கு வெறும் 4% இடஒதுக்கீடு என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டால், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெற்றி பெறுவோம் என்று நினைத்து எங்கள் இளைஞர்கள் போட்டித் தன்மையை இழந்துவிடுவார்கள். இது, சமூகத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, கீழே தள்ளிவிடும்.

கேள்வி: சைனிக்கள் என்பவர்கள் யார்?

சைனி: ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரவம்ச ராஜபுத்திரர்கள். நாங்கள் கிருஷ்ணரின் தாத்தா மதுராவின் மகாராஜா ஷூர் சைனியின் வழித்தோன்றல்கள். நாங்கள் எங்கள் மகள்களுக்கும் மகன்களுக்கும் ராஜபுத்திர குலத்தில் திருமணம் செய்து வைக்கிறோம். எங்கள் மக்கள் முக்கியமாக ஜம்மு, சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் சர்வதேச எல்லையில் அதிகம் வாழ்கிறார்கள்.

கேள்வி: இடஒதுக்கீட்டு நிலைக்கு ஏற்ற சமூகம் என கருத்தில் கொள்வதற்கான அளவுகோல் என்னவாக இருக்க வேண்டும்?

சைனி: ஜம்மு கஷ்மீரில் எஸ்.இ.பி.சி-களை அடையாளம் காண்பதற்கான எந்த அளவுகோலையும் நாங்கள் பூர்த்தி செய்யவில்லை. அந்த அளவுகோல்களின்படி, ஒரு சமூகத்தின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 25% வீடற்றவர்களாக இருக்க வேண்டும். அந்த சமூகத்தில் கணிசமான அளவு பெண்கள் 17 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். குடிநீரை குறைந்தபட்சம் 1 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வர வேண்டும். 5-14 வயதுக்குட்பட்ட பள்ளி இடைநிற்றல்களின் விகிதம் அதிகம் இருக்க வேண்டும் ஆகியவை அளவுகோல்களாக இருக்க வேண்டும்.

… ஜம்மு காஷ்மீரில் உள்ள எங்கள் மக்களில் பெரும்பாலோர் நிலப்பிரபுக்கள், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு கை பம்புகள் இருக்கிறது. எங்களிடம் நல்ல கல்வியறிவு விகிதம் உள்ளது. எங்கள் சமூகத்தில் ஒருவர் ராணுவத்தில் இருந்து பிரிகேடியராகவும், மற்றொருவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் இருந்து ஐ.ஜி.யாகவும் இருந்து ஓய்வு பெற்றவர்கள். மற்றவர்கள், கர்னல், லெப்டினன்ட் கர்னல், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என்ற அளவில் பணியாற்றுகிறார்கள். ராணுவம், துணை ராணுவப் படைகளில் கீழ்நிலையில் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கில்லை. சமூகத்தில் குறைந்தது நான்கைந்து பேர் ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள், இன்னும் பலர் கல்லூரிகளில் பேராசிரியர்கள், கிட்டத்தட்ட இரண்டு டஜன் அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

எங்கள் மக்களில் பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல், பல தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வணிக நிறுவனங்களை நடத்துகிறார்கள். இன்னும் எங்களை சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என்று கூறுவீர்களா?

கேள்வி: இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஆணையம் ஏன் ஜம்மு காஷ்மீரில் உள்ள எஸ்.இ.பி.சி பட்டியலில் சைனிகளை சேர்க்க பரிந்துரைத்தது என்று நினைக்கிறீர்கள்?

சைனி: இதற்கு முன் மூத்த பதவிகளில் பணியாற்றிய சில தலைவர்கள், அரசியல் நலன்களுக்காக ஆணையத்தில் பிரதிநிதித்துவம் செய்தனர். ஆணையம் எந்த ஒரு கணக்கெடுப்பும் நடத்தவில்லை அல்லது பரிந்துரை செய்வதற்கு முன் சமூகத்தின் எந்த தலைவரையும் தொடர்பு கொள்ளவில்லை.

கே: இடஒதுக்கீடுக்கு பதிலாக சைனி சமூகம் என்ன விரும்புகிறது?

சைனி: சமூகத்தில் ஒரு சாதியாகக் கருதி எங்களுக்கு இடஒதுக்கீடு பலன் வழங்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் மிகவும் பின்தங்கியிருக்கும் வேறு சில சமூகங்களுக்கு கொடுக்க வேண்டும். இருப்பினும், அரசு இன்னும் எங்களுக்கு இடஒதுக்கீடு பலனை வழங்க விரும்பினால், அதை ஜாதி அடிப்படையில் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வழங்க வேண்டும்.

கே: இடஒதுக்கீடு பலன்களை வழங்குவதற்கான அரசின் முடிவு சைனி சமூகத்தை எவ்வாறு பாதித்துள்ளது?

சைனி: எஸ்.இ.பி.சி என்ற தவறான சிந்தனையில் இருந்து வெளியே வந்து, நாங்கள் ‘கீழ் சாதி’ அல்ல என்பதை மற்ற ராஜ்புத் சமூகங்களை நம்ப வைக்க வேண்டும். அரசாங்கம் சைனிகளை எஸ்.இ.பி.சி பட்டியலில் சேர்த்து வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, ரம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு ராஜ்புத் குடும்பம் கதுவா மாவட்டத்தில் உள்ள சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கு தங்கள் மகளைத் திருமணம் செய்ய மறுத்து உள்ளனர். இப்போது, ​​சைனி சமூகமும் உயர்சாதியினர் என்று சிறுமியின் குடும்பத்தை நம்ப வைக்க முயற்சி செய்கிறது.

கேள்வி: உங்கள் எதிர்கால நடவடிக்கை என்ன?

சைனி: எஸ்.இ.பி.சி பிரிவை கவனிக்கும் ஆணையம் டிசம்பர் 6-ம் தேதி எங்களை அழைத்துள்ளது. நாங்கள் எங்கள் கருத்தை முன்வைப்போம். எஸ்.இ.பி.சி என்று அழைக்கப்படுவது வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை திரும்பப் பெறவில்லை என்றால், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புதுடெல்லிக்குச் செல்வோம். ஜந்தர் மந்தரிலும் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்துவோம். ஜம்மு காஷ்மீரில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: All jammu and kshmir sainis sabh wants exit quota benefits