scorecardresearch

ஞானவாபி மசூதியில் சிவ லிங்கமா? நீரூற்றா?; விஞ்ஞான ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு மே 16 ஆம் தேதி, காசி விஸ்வநாதர் கோவில்-ஞானவாபி மசூதியின் வீடியோ கிராஃபிக் ஆய்வு உள்ளூர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனால் முடிக்கப்பட்டது.

Allahabad High Court orders scientific survey of shivling in Gyanvapi mosque
சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட ஞானவாபி மசூதி

அலகாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கீழ் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் “சிவலிங்கத்தின்” கார்பன் டேட்டிங் உட்பட “விஞ்ஞான ஆய்வுக்கு” உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டு மே 16 ஆம் தேதி, நீதிமன்ற உத்தரவுப்படி காசி விஸ்வநாதர் கோவில்- ஞானவாபி மசூதியின் வீடியோ கிராஃபிக் சர்வே உள்ளூர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனால் முடிக்கப்பட்டது.

கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் போது, மசூதி வளாகத்திற்குள் இந்து தரப்பால் ஒரு “சிவலிங்கம்” என்றும், முஸ்லிம் தரப்பில் “நீரூற்று” என்றும் கூறப்படும் ஒரு அமைப்பு கண்டறியப்பட்டது.
ஏப்ரல் 8, 2022 அன்று வாரணாசி சிவில் நீதிபதி (மூத்த பிரிவு), ரவிக்குமார் திவாகரின் உத்தரவின் பேரில் வீடியோகிராஃபிக் சர்வே நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்து மனுதாரர்கள் – லக்ஷ்மி தேவி மற்றும் மூன்று பேர் – அக்டோபர் 14, 2022 அன்று வாரணாசி மாவட்ட நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அறிவியல் ஆய்வு மற்றும் கார்பன் டேட்டிங் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில், “16.05.2022 அன்று கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் அடியில் உள்ள கட்டுமானத்தின் தன்மையைக் கண்டறிய, மனுதாரர்களுடன் தொடர்புடைய ஆய்வு அல்லது தரை ஊடுருவும் ரேடார் (ஜிபிஆர்) அல்லது அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் மனுவில், “கார்பன் டேட்டிங் மூலம் அறிவியல் ஆய்வு செய்ய வேண்டும் அல்லது சிவலிங்கத்தின் வயது, தன்மை மற்றும் பிற கூறுகளை தீர்மானிக்க வேண்டும்” என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய இந்து தரப்பு வழக்கறிஞர் ஹரி ஷங்கர் ஜெயின், “மசூதி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இது ஒரு நீரூற்று என்கிறது முஸ்லிம் தரப்பு. சிவலிங்கம் என்று சொல்கிறோம். சிவலிங்கத்திற்கு எந்த சேதமும் இல்லாமல், சிவலிங்கத்தை பகுப்பாய்வு செய்து ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரி்வித்தார்.

இந்த உத்தரவை நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா-1 வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். இது தொடர்பாக வழக்குரைஞர் ஜெயின், “அக்டோபர் 14, 2022 அன்று வாரணாசி மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Allahabad high court orders scientific survey of shivling in gyanvapi mosque