Advertisment

புயல் பாதிப்பு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் கேட்டறிந்த அமித்ஷா

புதுச்சேரி மாநிலத்தில் புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா முதலமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் .

author-image
WebDesk
New Update
Rangasamy Amitshah

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதுச்சேரி மாநிலத்தில் புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா முதலமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இது குறித்து முதல்வர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisment

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சின்னம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இப்புயல் சின்னம் மேலும் வலுவடைந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால், புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகளில் பாதிப்பு மிகுதியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா   முதலமைச்சர் ந. ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். 

அப்போது முதலமைச்சர் அவர்கள், வங்கக்கடலில் உருவாகியுள்ள மிச்சாங் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் அனைத்துத் துறைகளும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும், மழைக்குப் பின்னர் சேதங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும், தேவைப்படும் நிவாரண உதவிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று  மத்திய உள்துறை அமைச்சர் அவர்களிடம்  முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment