Advertisment

ஆந்திராவில் தேர்தல் கள நிலவரம் மாறியது எப்படி?

முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வி ஆகியவை தற்போதைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்ட முக்கிய காரணிகளில் ஒன்று. இது சந்திரபாபு நாயுடுவின் தேலுங்கு தேசம் கட்சிக்கு உதவியது.

author-image
WebDesk
New Update
pawan modi jagan

மக்களவைத் தேர்தல், ஆந்திரப் பிரதேச தலைவர்கள் பவன் கல்யாண்; சந்திரபாபு நாயுடு; ஜெகன் மோகன் ரெட்டி (Photos: PTI & Express)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி (ஜே.எஸ்.பி) மற்றும் பா.ஜ.க ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பெரும் வெற்றியை நோக்கிச் செல்கின்றன. இது 2019-ம் ஆண்டு  தேர்தல் முடிவுகளுக்கு முற்றிலும் தலைகீழாக மாறுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:How the tables were turned in Andhra Pradesh

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட பின்னர், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட கைவிடப்பட்ட தெலுங்குதேசம் தலைமையிலான கூட்டணிக்கு இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி பலவீனமடைந்தது ஏன்?

2019 தேர்தலுக்கு முன்னதாக தனது பாதயாத்திரையின் போது வாக்குறுதியளித்த நவரத்னாலு (ஒன்பது ரத்தினங்கள்) என பெயரிடப்பட்ட தனது ஒன்பது நலத்திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பதில் ஜெகன் அரசின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை.

அப்படி செய்வதன் மூலம், வேலைவாய்ப்பு, குடிமை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை நாடிய பெரும்பான்மையான மக்களின் கோரிக்கைகளை முதல்வர் கவனிக்கவில்லை. ஐந்தாண்டு கால ஆட்சியில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கம் மாநிலத்தில் பெரிய முதலீடுகளை எடுக்கவோ அல்லது புதிய திட்டங்களைத் தொடங்கவோ தவறிவிட்டது.

ஜெகன், ஆட்சியைவிட நலத் திட்டத்தைச் செயல்படுத்துவதை விரும்புவதால், ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யின் உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது கூட்டணியால் சுரண்டப்பட்டது. சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் டஜன் கணக்கான பொதுக் கூட்டங்களில் பேசினார்கள். அதே நேரத்தில் வேலையின்மை மற்றும் தொழில்துறை வளர்ச்சியின் பற்றாக்குறையை சமாளிப்போம் என்று மக்களுக்கு உறுதியளித்தனர். மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சி வேண்டும் என்று மக்களிடம் சொல்லும் அளவிற்கு சந்திரபாபு நாயுடு சென்றார்.

இந்த கூட்டணி கம்மா-காப்பு பிரிவினையை சமாளித்து பாரம்பரிய போட்டியாளர்களின் வாக்குகளை தனக்கு சாதகமாக ஒருங்கிணைத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யை வேறு என்ன காரணிகள் முறியடித்தன?

ஆந்திரப் பிரதேசம் 2 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாதது வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தெரிகிறது.

2014-ல் அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அறிவித்த சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து நன்மதிப்பைப் பறிக்கும் முயற்சியில், ஜெகன் மூன்று தலைநகர் கோட்பாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த  திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னேறத் தவறிவிட்டார்.

மாநில அரசின் நலத்திட்டங்களை வீட்டுக்கே சென்று வழங்குவதை உறுதி செய்வதற்காக ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்ட தன்னார்வலர்களின் அணுகுமுறை, அவர்களுக்கு எதிரான பல புகார்களுடன் செயல்படுவதற்கான மற்றொரு காரணம். சில தன்னார்வலர்கள் ஒய்.எஸ்.ஆர்.சி.பி-க்கு விசுவாசமாக சத்தியம் செய்யாவிட்டால் நன்மைகளை இழக்க நேரிடும் என்று மக்களை அச்சுறுத்தினர்.

நலத்திட்ட பயனாளிகள் ஜெகனுக்கு வாக்களிக்கவில்லையா?

பயனாளிகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டியதைவிட குறைவான பலன்களைப் பெறுவதாகவும் மேலும் சிலர் முழுமையாக ஒதுக்கப்பட்டதாகவும் பல செய்திகள் வெளிவந்தன. மேலும், 2019-ல் ஜெகனை அனுதாபத்தின் பேரில் தேர்ந்தெடுத்த வாக்காளர்களில் ஒரு பகுதியினர் இந்த முறை அவரை கைவிட்டதாக தெரிகிறது.

அரசாங்கத்தின் நிதி பெரும்பகுதி பணப் பலன்களுக்காக செலவிடப்படுகிறது என்ற அடிப்படை உணர்வும் ஜெகனுக்கு எதிராக வேலை செய்ததாகத் தெரிகிறது. அவர் தனது அரசாங்கம் டி.பி.டி-க்காக ரூ. 3.5 லட்சம் கோடியை சுருட்டியதாக பலமுறை பேரணிகளில் கூறியிருந்தார். உதவித்தொகை கிடைக்காத தகுதியுடைய பயனாளிகள், பணம் எங்கே போனது என தெரியாமல் தவித்தனர்.

தெலுங்கு தேசம் மற்றும் ஆந்திராவுக்கு முன்னால் இருக்கும் வழி என்ன?

சந்திர பாபு நாயுடுவின் உடனடிப் பணிகளில், மாநிலத்தின் நிதி நிலைமையைக் கணக்கிட்டு, அதை மீண்டும் சரியான வழியில் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளைத் தொடங்குதல் ஆகியவை அடங்கும். அவர் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ள “பாபு சூப்பர் சிக்ஸ்” திட்டங்களுக்கான நிதியை உறுதி செய்ய வேண்டும்.

அமராவதியில் தலைநகரை மீண்டும் கட்டியெழுப்புவதும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment