6 பணிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு: தேதிகளை மாற்ற புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை

புதுச்சேரி சுகாதார துறை துறையில் 6 பணிகளுக்கு ஒரே நேரத்தில் பணிக்கான தேர்வு என்பதால் தேதிகளை மாற்ற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரி சுகாதார துறை துறையில் 6 பணிகளுக்கு ஒரே நேரத்தில் பணிக்கான தேர்வு என்பதால் தேதிகளை மாற்ற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Rangasamy

புதுச்சேரி சுகாதார துறை துறையில் 6 பணிகளுக்கு ஒரே நேரத்தில் பணிக்கான தேர்வு எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பிய விண்ணப்பதாரர்கள், பணியமர்த்தல் தேர்வுத் தேதிகளை மாற்ற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரி சுகாதார துறை துறையில் 6 பணிகளுக்கு ஒரே நேரத்தில் பணிக்கான தேர்வு எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பிய விண்ணப்பதாரர்கள், பணியமர்த்தல் தேர்வுத் தேதிகளை மாற்ற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

புதுச்சேரி, மாஹே, காரைக்கால் மற்றும் யானம் பகுதிகளில் இருந்து சுகாதாரத் துறையின் பணியமர்த்தல் தேர்வுகளுக்குத் தகுதி உள்ள பல்வேறு விண்ணப்பதாரர்கள், சமீபத்தில் வெளியான தேர்வுத் தேதி அட்டவணையை வெளியிடப்பட்டது.

அனைத்து பணிகளுக்குமான தேர்வுகளை ஒரே நாளில் நடத்தும் புதிய அட்டவணையால், பல்வேறு மருத்துவ டிப்ளோமாக்கள் பெற்றவர்கள் ஒரே நேரத்தில் பல பணிகளுக்கு தகுதி பெற்றிருந்தாலும், ஒரே ஒரு பணிக்கு மட்டுமே தேர்வுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது என அவர்கள் கூறுகிறார்கள்.

இதனை கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி தேர்வுத் தேதிகளை அமைக்க வேண்டும் என்றும், ஆன்லைன் விண்ணப்பத் தளத்தை 2–3 நாட்கள் மட்டுமே மீண்டும் ஆன்லைனில் வெளியிடப்படும்  என்றும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment
Advertisements

2025 ஜூன் 4-ம் தேதி வெளியான டைரக்டரேட் ஆஃப் ஹெல்த் அண்ட் பேமிலி வெல்பேர் சர்வீசஸ் அறிவிப்பின்படி, தேர்வுகள் நடைபெற உள்ள பணிகள்:

நர்சிங் ஆபிசர் (அலோபதி)

தியட்டர் அசிஸ்டென்ட்

ஏ.என்.எம். (ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப்)

மேட்டர்னிட்டி அசிஸ்டென்ட்

ECG டெக்னீசியன்

ஹெல்த் அசிஸ்டென்ட்

ஜூலை 24 அன்று வெளியான அட்டவணையின்படி, இத்தனை பணிகளுக்குமான தேர்வுகள் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளன. இந்த முறை ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வெறும் 20 நாட்களே என்பதாலும், முந்தைய வேலைவாய்ப்பு அறிவிப்புகளைக் காட்டிலும் குறைந்த நேரமே இருந்ததாகவும் விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அறிவிப்பின் தெளிவின்மையால் பலர் தங்கள் அனைத்து தகுதிகளுக்கும் விண்ணப்பிக்க முடியாமல் தவறியுள்ளதாகவும், குறைந்தது 2–3 நாட்களாவது விண்ணப்ப தளத்தை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

இப்போதே சுகாதார துறையும், ஆளுநருக்கும் ஒரு மனுவை அனுப்பியிருந்தாலும் எந்தவிதமான பதிலும் வராத நிலையில், தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, யானம் எம்.எல்.ஏ. அசோக் மற்றும் டெல்லி பிரதிநிதியாக உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்  மல்லாடி கிருஷ்ணாராவை இந்த விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை முன்வைத்து வரும் முக்கிய விண்ணப்பதாரர்கள்: அடபா சம்பத் குமார்,  சுவாமி, வீரபாபு, சௌம்யா, அகல்யா, சண்முகம், கணேசன், கௌதம், சேஷகிரி உள்ளிட்டோர், “எங்களுக்கு கூடுதல் கால அவகாசமோ, வயது சலுகையோ வேண்டாம். ஆனால், நாங்கள் தகுதி பெற்ற அனைத்து பணிகளுக்குமான தேர்வுகளிலும் பங்கேற்கும் வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை” என அடபா சம்பத் குமார் கூறினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: