/indian-express-tamil/media/media_files/zOFuzTBehzUEK4VsJjwQ.jpg)
இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார், மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட 22வயது பெண் அளித்த புகாரில், வருண் குமாரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பேசியதாகவும். தொடர்ந்து அவரை 2018ம் ஆண்டு சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு 17 வயது என்றும். பல முறை அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை இவர் செய்துள்ளார்., திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வருண் குமார் புவனேஷ்வரில் நடக்கும் எப்.பி.ஐ புரோ லீக் போட்டியில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இந்நிலையில் இந்த செய்தி வெளியான பின்பு, அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
மேற்கு பெங்களூரு காவல்துறை டி.சி.பி எஸ் கிரிஷ் கூறுகையில், “ அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக்ஷன் 376, செக்ஷன் 420 ( ஏமாற்றுத்தல் ) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் அவர் திருமணம் செய்வேன் என்று சத்தியம் செய்துள்ளார். தற்போது வேண்டாம் என்று மறுத்துள்ளார்” என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக வருண் மற்றும் அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் அவர்கள் தெரிவிக்கவில்லை இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.