Advertisment

Helicopter Crash updates: முப்படைத் தளபதி பிபின் ராவத்க்கு டிசம்பர் 10 ஆம் தேதி இறுதிச்சடங்கு

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Helicopter Crash updates: முப்படைத் தளபதி பிபின் ராவத்க்கு டிசம்பர் 10 ஆம் தேதி இறுதிச்சடங்கு

Army helicopter with CDS Bibin Rawat on board crashed: இந்திய ராணுவ முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகில் உள்ள நஞ்சப்பசத்திரம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய இந்த ஹெலிகாப்டரில் ராவத்தின் குடும்ப உறுப்பினர்களும் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூரின் வெலிங்டன் பயிற்சி மையத்டதிற்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் எம்.ஐ. -17வி5 என்ற ஹெலிகாப்டரில் இவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். விபத்திற்கான காரணம் என்ன என்பதை விசாரிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:07 (IST) 08 Dec 2021
    பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இந்தியாவின் முதல் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.

    இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பில் தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிகிச்சையில் இருக்கும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 22:01 (IST) 08 Dec 2021
    பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் சோனியா காந்தி

    தமிழகத்தின் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடுவதில்லை என காங்கிரஸ் கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சித் தலைவரின் முடிவை ட்விட்டரில் அறிவித்து, கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 21:54 (IST) 08 Dec 2021
    முப்படை தளபதி மரணம்; பூடான் பிரதமர் இரங்கல்

    "இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மனைவி உட்பட 13 விலைமதிப்பற்ற உயிர்களைக் கொன்றது பற்றி அறிந்து கொள்வது மிகவும் வேதனை அளிக்கிறது. பூட்டான் மக்களும் நானும் இந்தியாவிற்கும், துயரமடைந்த குடும்பங்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம்" என்று பூடான் பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 21:07 (IST) 08 Dec 2021
    பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

    பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்



  • 20:40 (IST) 08 Dec 2021
    ஜெனரல் ராவத்தின் மறைவுக்கு பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல்

    தமிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



  • 19:59 (IST) 08 Dec 2021
    பிபின் ராவத்க்கு வீரவணக்கம் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல்

    ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பேர் உயிரிழப்புக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது



  • 19:53 (IST) 08 Dec 2021
    பிபின் ராவத் தேசத்திற்கு ஆற்றிய சேவை என்றும் நினைவு கூரப்படும் – வெங்கையா நாயுடு

    தமிழ்நாட்டின் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி ஸ்ரீமதி மதுலிகா ராவத், ஆயுதப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பலரின் துயர மரணத்தால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்.

    அவரது குறிப்பிடத்தக்க தலைமைத்துவம் மற்றும் வியூக பார்வைக்கு பெயர் பெற்ற, ஜெனரல் ராவத் நமது பாதுகாப்பு திறன்களுக்கு பெரும் பலத்தை சேர்த்தார் மற்றும் நமது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு நட்சத்திர பங்களிப்பை செய்தார். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவை என்றும் நினைவுகூரப்படும்.

    நான் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி எனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பிரிந்த குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன. என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்



  • 19:42 (IST) 08 Dec 2021
    பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு உடன் பிரதமர் மோடி ஆலோசனை

    முப்படைத் தளபதி மரணமடைந்ததையடுத்து, பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு உடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர்



  • 19:29 (IST) 08 Dec 2021
    கோவையில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு புறப்பட்டார் ஸ்டாலின்

    கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூர் பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் செல்கிறார்



  • 19:11 (IST) 08 Dec 2021
    இந்தியா தனது துணிச்சலான மகனை இழந்துவிட்டது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஜியின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது நான்கு தசாப்தகால தன்னலமற்ற சேவை விதிவிலக்கான வீரம் மற்றும் வீரத்தால் குறிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்ததை அறிந்து கொள்வது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் கடமையைச் செய்யும்போது இறந்த ஒவ்வொருவருக்கும் சக குடிமக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • 18:59 (IST) 08 Dec 2021
    முப்படை தளபதி மரணம்; பிரதமர் மோடி இரங்கல்

    தமிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்ததால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் இந்தியாவிற்கு சேவை செய்தனர். என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. என பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 18:50 (IST) 08 Dec 2021
    முப்படை தளபதி மரணம்; என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன - அமித் ஷா

    நமது முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஜியை மிகவும் துயரமான விபத்தில் இழந்துள்ளதால், தேசத்திற்கு மிகவும் சோகமான நாள். தாய்நாட்டிற்கு மிகுந்த பக்தியுடன் சேவையாற்றிய துணிச்சலான வீரர்களில் இவரும் ஒருவர். அவரது முன்மாதிரியான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

    திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் சோகமான மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. இந்த துயரமான இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும்.

    Gp கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். என அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்



  • 18:46 (IST) 08 Dec 2021
    முப்படை தளபதி மரணம்; ராகுல் காந்தி இரங்கல்

    ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு முன்னோடியில்லாத சோகம் மற்றும் இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவர்களின் குடும்பத்துடன் உள்ளன.

    மேலும் உயிரிழந்த மற்ற அனைவருக்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள். இந்த துயரத்தில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. என ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



  • 18:34 (IST) 08 Dec 2021
    முப்படை தளபதி மரணம்; ராஜ்நாத் சிங் இரங்கல்

    “இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக எனது இதயம் துடிக்கிறது. தற்போது வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



  • 18:16 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து; முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் மரணம்

    இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்



  • 18:03 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் பலி - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

    இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் பலியாகியுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்



  • 17:36 (IST) 08 Dec 2021
    குன்னூர் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்

    குன்னூர் செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செல்கிறார்



  • 17:31 (IST) 08 Dec 2021
    அமைச்சரவைக் குழு உடன் பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு ஆலோசனை

    பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு உடன் பிரதமர் மோடி இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடுகிறார்



  • 17:31 (IST) 08 Dec 2021
    அமைச்சரவைக் குழு உடன் பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு ஆலோசனை

    பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு உடன் பிரதமர் மோடி இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடுகிறார்



  • 17:30 (IST) 08 Dec 2021
    குடியரசு தலைவர் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

    மும்பையில் பங்கேற்க திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்துள்ளார்



  • 17:09 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ராணுவ அதிகாரிகள்

    உள்ளூர் காவல்துறையின் ஆதரவுடன் இராணுவத்தினர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு மக்கள் அங்கே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாநில முதல்வர் மு.க.ஸ்டாலினும் அப்பகுதியை பார்வையிட உள்ளார். குன்னூரில் இருந்து கோயம்புத்தூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.



  • 16:35 (IST) 08 Dec 2021
    நாடாளுமன்றத்தில் நாளை ராஜ்நாத் சிங் அறிக்கை அளிப்பார்: வட்டாரங்கள் தகவல்

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிசம்பர் 9) நாடாளுமன்றத்தில் நிலைமை குறித்து அறிக்கை அளிப்பார் என்று வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.



  • 16:24 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு தனி விமானம் மூலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் செல்கிறார்.



  • 16:07 (IST) 08 Dec 2021
    பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதி பிபின் ராவத் வீட்டிற்கு வருகை

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.



  • 16:05 (IST) 08 Dec 2021
    குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

    குன்னூர் அருகே பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 16:05 (IST) 08 Dec 2021
    குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

    குன்னூர் அருகே பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 15:57 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றம்

    இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், குன்னூர் அருகே மதியம் 12.20 மணியளவில் விபத்துக்குள்ளானது.

    விபத்தில் தப்பிய நான்கு பேர் குன்னூர் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தமிழக காவல்துறை மற்றும் குன்னூரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. “அனைவருக்கும் தீக்காயங்கள் இருந்தன. கோவை பொது மருத்துவமனையில் இருந்து 6 மூத்த மருத்துவர்கள் அடங்கிய முதல் குழு குன்னூர் மருத்துவமனைக்கு வந்துள்ளது” என்று ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

    வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் இன்று பிற்பகல் கேடட் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த சி.டி.எஸ் ராவத்துடன் தரையிறங்க வேண்டிய ஹெலிபேடில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் விபத்து ஏற்பட்டது.



  • 15:54 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்தை அறிந்ததும் ஆய்வுக் கூட்டத்தை பாதியில் நிறுத்திய மம்தா பானர்ஜி

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், மம்தா

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆய்வுக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தினார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தை பாதியிலேயே முடித்தார். பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் தமிழ்நாட்டில் விழுந்து நொறுங்கியது.

    "எங்களுக்கு ஒரு சோகமான செய்தி கிடைத்தது. நான் அதிர்ச்சியடைந்தேன். என் வருத்தத்தை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த சந்திப்பை முடிக்கிறேன்," என்று கூறிவிட்டு மால்டாவில் சந்திப்பு நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறினார். மம்தா பானர்ஜி, மாநிலத்தில் நான்கு நாள் நிர்வாக சுற்றுப்பயணத்தில், பல ஆய்வுக் கூட்டங்களை நடத்த உள்ளார்.



  • 15:53 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணியும் தீவிரம்

    ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • 15:25 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணியும் தீவிரம்

    ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குன்னூரில்-ராணுவ-ஹெலிகாப்டர்-விபத்து:-முக்கிய-அதிகாரிகள்-பயணித்த-ஹெலிகாப்டர்-விபத்துக்குள்ளாகி-இருக்கிறது.-coonoor-helicoptercrash-army-bipinrawat-ooty-pic.twitter.com/HxzUTI4vpH—-Indian-Express-Tamil-(@IeTamil)-December-8,-2021-">



  • 15:24 (IST) 08 Dec 2021
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

    தமிழகத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நிலைமையை கண்காணித்து வருகிறார். விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.



  • 15:21 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணியும் தீவிரம்

    ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • 15:08 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து: குன்னூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர். இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மாலை 4.30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் குன்னூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 15:05 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து - மருத்துவர்கள் குன்னூர் வருகை

    ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய படைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் சிக்கினர். இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 6 சீனியர் மருத்துவர்கள் குன்னூர் வந்துள்ளனர்.



  • 15:02 (IST) 08 Dec 2021
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 10 பேர் சடலமாக மீட்பு; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். - 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல், விபத்து நிகழ்ந்த இடத்தின் மலைப் பள்ளத்தாக்குகளில் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 15:01 (IST) 08 Dec 2021
    குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பயணித்தோர் விவரம்

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. இந்தியப்படை தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத் , ஜிதேந்திர குமார்,ஹர்ஜிந்தர் சிங்,சாய் தேஜா,விவேக் குமார்,குருசேவாக் சிங்,எல்.எஸ்.லிடர்,ஹாவ் சாட்பால் ஆகியோர் ஆவர்.



  • 14:56 (IST) 08 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

    குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.



  • 14:54 (IST) 08 Dec 2021
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 10 பேர் சடலமாக மீட்பு; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். - 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல், விபத்து நிகழ்ந்த இடத்தின் மலைப் பள்ளத்தாக்குகளில் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 14:46 (IST) 08 Dec 2021
    ராகுல் காந்தி ட்வீட்

    விபத்தில் சிக்கியவர்கள் நலன் பெற ராகுல் காந்தி ட்வீட்

    Hoping for the safety of CDS General Bipin Rawat, his wife and others onboard the chopper.



    Prayers for speedy recovery.

    — Rahul Gandhi (@RahulGandhi) December 8, 2021


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment