ஜம்மு மற்றும் காஷ்மீரில் குறைந்த பனிப் பொழிவு இருப்பதால், எல்லை கட்டிப்பாட்டு கோட்டில் இந்திய ராணுவ வீரர்கள் முழு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜம்மு, காஷ்மீரில் பணிப் பொழிவு குறைவாக உள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் ஊடுருவல் அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு அதிகம் இருக்கும்போது ஊடுருவல் அதிகமாக இருக்காது. கட்டுப்பாட்டு எல்லை கோட்டில் இருக்கும் வழிகளில் முழுவதுமாக பனி மூவிடுவும் என்பதால் யாரும் ஊடுருவ முயற்சிக்கமாட்டார்கள்.
குளிர் காலத்தில் மரங்களிக்கு மேலாக அல்லது மரங்களுக்கு பின்பாக கூட மறைந்திருக்க முடியாது. இதனால் ஊடுருவல் குறையும். இதுபோன்ற குளிர் காலத்தில் எல்லை மற்றும் எல்லை கட்டுபாட்டு கோட்டில் காவலில் இருக்கும் வீரர்கள், சமதளத்திற்கு வந்து உளவுத்துறை சார்ந்த வேலைகளில் ஈடுபடுவார்கள். மேலும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஆப்பரேஷனில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அப்படி நடைபெறவில்லை இதனால் குளிர் கால பணிகள் பாதிக்கப்படுவதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பனி அதிகமாக இருக்கும் காலகட்டத்தில், பயங்கரவாதிகள் அங்கு வசிக்கும் மகக்ள் பயன்படுத்தும் பாதையை தேர்வு செய்ய வேண்டி வரும். இந்நிலையில் செக் போஸ்டில் இவர்கள் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போது குறைவாக பனிப் பொழிவு இருப்பதால், டிரான்ஸ்- பிர் பஞ்சல் வழிகளை திறந்து விட்டிருக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் நாம் வீரர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
கடந்த ஆண்டில் மட்டும் 71 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளதாக்கு பகுதிகளில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராணுவத்தின் தலைமை அதிகாரி மனோஜ் பாண்டே கூறுகையில் பள்ளதாக்கு பகுதியில் தற்போது நிலை சீராக உள்ளது என்று தெரிவித்தார். ராணுவ வீரர்களை குழுவை ரஜௌரி- பூஞ்ச் பகுதியில் அதிக ஆப்பரேஷன் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த இடம் மறைந்து இருந்து தாக்கும் இடமாக இருந்தது. பிர்- பஞ்சல் பகுதிகளில் அதிக ராணுவச் சண்டை நிகழ்ந்துள்ளது. ரஜௌரி- பூஞ்ச் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 20 பேர் கொல்லபட்டுள்ளனர்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil